Wednesday, October 27, 2010

பத்தாம் வீட்டு அதிபதி

பத்தாம் வீட்டு அதிபதி ஆறில் மறைந்தால்
ஜாதகர் தனது தந்தையின் இறுதிக்காலத்தின்
போது அருகில் இருக்க மாட்டார்.

ராகு

(எச்சரிக்கை: இக்குறிப்பு திருமணம் ஆனவர்கட்கு அல்ல )
ராகு கிரகமானது சூரியன் அல்லது சுக்ரன்
சேர்க்கை பெற்றால் இந்திரிய பலம் குறைவு.
திருமண பயம் உண்டு
குறிப்புதவி
ஜோதிடர் பாலசுந்தரம் ஆற்காடு

சுக்ரன்

சுக்ரன் நான்காம் வீட்டு அதிபனாகி
ஆட்சி, உச்சம் , திரிகோணம் பெற்று
கெடாமல் (கண்ணை கட்டுதே! ) இருந்தால்
அழகான சொந்த வீடு அமையும்.
கோமாதா குடி இருப்பாள்.

செவ்வாய்

செவ்வாய் இரண்டில் இருந்தால் ஜாதகர்
பேசும் போது கடினமான (Hard words)
வார்த்தைகளை (மொழிபெயர்ப்பு சரிதானே ?)
உபயோகிப்பார். இதனால் குடும்பத்தில் சில
தொல்லைகள் நேரிடும்.

குறிப்புதவி
ஜோதிடஸ்ரீ தேவசேனா சி.எம்.சி

Friday, October 22, 2010

குழந்தை பாக்கியம்


ஐந்தில் ஒரு கிரகம் நீச்சம் பெற்றாலும் ,
அவர் நின்ற சாரநாதன் குருவுடன் சேர்ந்தால்
குழந்தை பாக்கியம் உண்டு
குறிப்புதவி
தேவசேனா, சி.எம்.சி.

Thursday, October 21, 2010

இளைய சகோதரம்

மூன்றில் ராகு இருந்தாலும் அல்லது
மூன்றாவது வீட்டு அதிபதி ராகு
சாரம் பெற்றாலும் இளைய சகோதரன்/
சகோதரி பயன்படமாட்டார். /blush
குறிப்புதவி
ஜோதிடஸ்ரீ SAMU FASHION DE

தூக்கம்

பன்னிரண்டாவது வீட்டு அதிபதி லக்னத்தில்
இருந்தால் அந்த ஜாதகர் எப்படிப்பட்ட
இடத்திலும் தூங்குவார்.  மற்றும் எவ்வளவு
தூரம் வேண்டுமானாலும் நடப்பார்.
குறிப்புதவி
ஜெயராதே, துணைத் தலைவர், VARA

அழகு

லக்னத்தில் சந்திரன் இருந்து சுக்ரனால்
பார்க்கப்பட்டால் ஜாதகர் கவர்ச்சிகரமான
அழகுடையவர்.
குறிப்புதவி
ஜோதிடஸ்ரீ ஆறுமுகம், பொருளாளர், VARA

விளையாட்டில் பிரபலம்

செவ்வாய் மற்றும் ராகு மூன்று - ஆறு - பத்து -
பதினொன்றில் இருந்தால் விளையாட்டில்
பிரபலம் அடைவார்.
குறிப்புதவி
அவிட்டம் வி.ஸ்ரீனிவாசன்  சித்தூர்

வெற்றி வீரர்

மூன்றில் ராகு  இருந்தால் வெற்றி வீரர்
ஆனால் அனுபவ பாக்கியங்கள் குறைவு

இளவயது சாமியார்

பத்தில் கேது இருந்து லக்ன சனி
பார்த்தால் இளவயது சாமியார்

Friday, October 15, 2010

சகலகலாவல்லி மாலை


ஸ்ரீகுமரகுருபர சுவாமிகள்    இயற்றிய
சகலகலாவல்லி மாலை

வெண்டா மரைக்கன்றி நின்பதந் தாங்கவென் வெள்ளையுள்ளத்
தண்டா மரைக்குத் தகாதுகொ லோசக மேழுமளித்
துண்டா னுறங்க வொழித்தான்பித் தாகவுண் டாக்கும்வண்ணம்
கண்டான் சுவைகொள் கரும்பே சகல கலாவல்லியே. 1

நாடும் பொருட்சுவை சொற்சுவை தோய்தர நாற்கவியும்
பாடும் பணியிற் பணித்தருள் வாய்பங்க யாசனத்திற்
கூடும் பசும்பொற் கொடியே கனதனக் குன்றுமைம்பாற்
காடுஞ் சுமக்குங் கரும்பே சகல கலாவல்லியே. 2

அளிக்குஞ் செழுந்தமிழ்த் தெள்ளமு தார்ந்துன் னருட்கடலிற்
குளிக்கும் படிக்கென்று கூடுங்கொ லோவுளங் கொண்டுதெள்ளித்
தெளிக்கும் பனுவற் புலவோர் கவிமழை சிந்தக்கண்டு
களிக்குங் கலாப மயிலே சகல கலாவல்லியே. 3

தூக்கும் பனுவற் துறைதோய்ந்த கல்வியுஞ் சொற்சுவைதோய்
வாக்கும் பெருகப் பணித்தருள் வாய்வட நூற்கடலும்
தேக்குஞ் செழுந்தமிழ்ச் செல்வமுந் தொண்டர்செந் நாவினின்று
காக்குங் கருணைக் கடலே சகல கலாவல்லியே. 4


பஞ்சப் பிதந்தரு செய்யபொற் பாதபங் கேருகமென்
நெஞ்சத் தடத்தல ராததென் னேநெடுந் தாட்கமலத்
தஞ்சத் துவச முயர்த்தோன்செந் நாவு மகமும்வெள்ளைக்
கஞ்சத் தவிசொத் திருந்தாய் சகல கலாவல்லியே. 5

பண்ணும் பரதமுங் கல்வியுந் தீஞ்சொற் பனுவலும்யான்
எண்ணும் பொழுதெளி தெய்தநல் காயெழு தாமறையும்
விண்ணும் புவியும் புனலுங் கனலும்வெங் காலுமன்பாடி
கண்ணுங் கருத்து நிறைந்தாய் சகல கலாவல்லியே. 6

பாட்டும் பொருளும் பொருளாற் பொருந்தும் பயனுமென்பாற்
கூட்டும் படிநின் கடைக்கணல் காயுளங் கொண்டுதொண்டர்
தீட்டுங் கலைத்தமிழ்த் தீம்பா லமுதந் தெளிக்கும்வண்ணம்
காட்டும்வெள் ளோதிமப் பேடே சகல கலாவல்லியே. 7

சொல்விற் பனமு மவதான முங்கவி சொல்லவல்ல
நல்வித்தை யுந்தந் தடிமைகொள் வாய்நளி னாசனஞ்சேர்
செல்விக் கரிதென் றொருகால முஞ்சிதை யாமைநல்கும்
கல்விப் பெருஞ்செல்வப் பேறே சகல கலாவல்லியே. 8

சொற்கும் பொருட்கு முயிராமெய்ஞ் ஞானத்தின் தோற்றமென்ன
நிற்கின்ற நின்னை நினைப்பவர் யார்நிலந் தோய்புழைக்கை
நற்குஞ் சரத்தின் பிடியோ டரசன்ன நாணநடை
கற்கும் பதாம்புயத் தாயே சகல கலாவல்லியே. 9

மண்கண்ட வெண்குடைக் கீழாக மேற்பட்ட மன்னருமென்
பண்கண் டளவிற் பணியச்செய் வாய்படைப் போன்முதலாம்
விண்கண்ட தெய்வம்பல் கோடியுண்டேனும் விளம்பிலுன்போற்
கண்கண்ட தெய்வ முளதோ சகல கலாவல்லியே. 10


Thursday, October 14, 2010

பித்ரு சாபம்

சூரியன் அல்லது சந்திரன்
சனி, ராகு, கேது ஆகிய கிரகங்களுடன்
சேர்ந்திருந்தால் பித்ரு சாபம் எனப்படும்.
இதனால் வாழ்க்கையில் தடைகள் உண்டாகும்.  
 "/blush"
புண்ய ஷேத்ரங்களில் பிண்ட தானம்
அளிப்பதன் மூலம் இதற்க்கு
தீர்வு காணலாம்.

சனி + சந்திரன்

சனி மற்றும் சந்திரன் நீர் ராசிகளில்
இருந்தால் (கடகம், விருச்சிகம், மீனம்)
ஜாதகர் குறட்டை அல்லது பெருமூச்சு
விடுவார்.
ஒரு முக்கிய குறிப்பு:
இந்த ஜாதக அமைப்பு இருந்து குறட்டையோ
பெருமூச்சோ விட்டால் சனி மற்றும் சந்திரனே
பொறுப்பு. இல்லாமல் விட்டால்
 ஜாதகரே பொறுப்பு.    ":))     :))    :))"

Monday, October 11, 2010

சூரியன் + புதன்

ஒன்று -நான்கு - எட்டில் சூரியன் மற்றும் புதன்
இணைந்து இருவரும் கெடாமல் இருப்பின்
ஜாதகர் மிக உயர்ந்த படிப்பு படிப்பார்.
குறிப்புதவி
அவிட்டம் ஸ்ரீனிவாசன்,
சித்தூர்.

சர லக்னம்

சர லக்னக்காரர்களுக்கு (மேஷம், கடகம், துலாம்,
மகரம்) இரண்டு மற்றும் ஏழாவது அதிபதிகள்
மாரகாதிபதிகள்.  அவர்கள்தான் மாரகம் அளிக்க
பொறுப்புள்ளவர்கள் ஆவர்.
(They are in charge of giving death)
குறிப்புதவி
ஜோதிடசிரோன்மணி
கடகம் எஸ். மனோகரன்

லக்னாதிபதி


லக்னாதிபதி கெடாமல் குரு சாரம் பெற்று 
குருவால் பார்க்கப்பட்டால் என்றும் 
எல்லோரிடமும் கருணையுடன் 
இருப்பார்.
குறிப்பு உதவி
பாலசுப்ரமணியன்,  நிறுவனர்
வேலூர் ஜோதிட ஆராய்ச்சியாளர் சங்கம் 

சுக்ரன் செவ்வாய் சேர்க்கை


சுக்ரன் செவ்வாய் சேர்ந்து பலம் பெற்றால் 
நரம்பு வியாதிகள் (Fits Disease) வரும் வாய்ப்பு  
உண்டு
குறிப்பு உதவி
ரவிகுமார்,
செயலாளர்
வேலூர் ஜோதிட ஆராய்ச்சியாளர் சங்கம் 

கடக லக்னம்


கடக லக்னக்காரர்களுக்கு  ஏழாம் அதிபதி சனி 
மேஷத்தில் இருந்தால் முதல் மனைவிக்கு 
தோஷம் உண்டு
குறிப்பு உதவி
ஜெயராதே,
துணை தலைவர்
வேலூர் ஜோதிட ஆராய்ச்சியாளர் சங்கம் 

Thursday, October 7, 2010

கோளறு பதிகம்

தமிழில் உள்ள மிகச் சிறந்த நவக்கிரக துதிப்பாடல்
பயன் பெற விரும்புவோர் பயன் பெறலாம்


வேயுறு தோளிபங்கன் விடமுண்ட கண்டன்
மிகநல்ல வீணை தடவி
மாசறு திங்கள்கங்கை முடிமே லணிந்தென்
உளமே புகுந்த அதனால்
ஞாயிறு திங்கள்செவ்வாய் புதன்வியாழம் வெள்ளி
சனிபாம்பி ரண்டு முடனே
ஆசறு நல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியா ரவர்க்கு மிகவே.                       01


என்பொடு கொம்பொடாமை யிவைமார் பிலங்க
எருதேறி யேழை யுடனே
பொன்பொதி மத்தமாலை புனல்சூடி வந்தென்
உளமே புகுந்த அதனால்
*ஒன்பதொ டொன்றொடேழு பதினெட்டொ டாறும்
உடனாய நாள்க ளவைதாம்
அன்பொடு நல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியா ரவர்க்கு மிகவே.                      02

உருவலர் பவளமேனி ஒளிநீ றணிந்து
உமையோடும் வெள்ளை விடைமேன்
முருகலர் கொன்றைதிங்கள் முடிமே லணிந்தென்
உளமே புகுந்த அதனால்
திருமகள் கலையதூர்தி செயமாது பூமி
திசை தெய்வ மானபலவும்
அருநெதி நல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியா ரவர்க்கு மிகவே.                      03



மதிநுதல் மங்கையோடு வடபா லிருந்து
மறையோது மெங்கள் பரமன்
நதியொடு கொன்றைமாலை முடிமே லணிந்தென்
உளமே புகுந்த அதனால்
கொதியுறு காலனங்கி நமனோடு தூதர்
கொடுநோய்க ளான பலவும்
அதிகுண நல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியா ரவர்க்கு மிகவே.                    04


நஞ்சணி கண்டனெந்தை மடவாள் தனோடும்
விடையேறும் நங்கள் பரமன்
துஞ்சிருள் வன்னிகொன்றை முடிமே லணிந்தென்
உளமே புகுந்த அதனால்
வெஞ்சின அவுணரோடு முருமிடியு மின்னு
மிகையான பூத மவையும்
அஞ்சிடு நல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியா ரவர்க்கு மிகவே.                     05

வாள்வரி யதளதாடை வரிகோ வணத்தர்
மடவாள் தனோடு முடனாய்
நாண்மலர் வன்னிகொன்றை நதிசூடி வந்தென்
உளமே புகுந்த அதனால்
கோளரி யுழுவையோடு கொலையானை கேழல்
கொடுநாக மோடு கரடி
ஆளரி நல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியா ரவர்க்கு மிகவே.                     06


செப்பிள முலைநன்மங்கை ஒருபாக மாக
விடையேறு செல்வ னடைவார்
ஒப்பிள மதியுமப்பும் முடிமே லணிந்தென்
உளமே புகுந்த அதனால்
வெப்பொடு குளிரும்வாதம் மிகையான பித்தும்
வினையான வந்து நலியா
அப்படி நல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியா ரவர்க்கு மிகவே.                      07


வேள்பட விழிசெய்தன்று விடமே லிருந்து
மடவாள் தனோடும் உடனாய்
வாண்மதி வன்னிகொன்றை மலர்சூடி வந்தென்
உளமே புகுந்த அதனால்
ஏழ்கடல் சூழிலங்கை அரையன்ற னோடும்
இடரான வந்து நலியா
ஆழ்கடல் நல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியா ரவர்க்கு மிகவே.                      08


பலபல வேடமாகும் பரனாரி பாகன்
பசுவேறும் எங்கள் பரமன்
சலமக ளோடெருக்கு முடிமேல் அணிந்தென்
உளமே புகுந்த அதனால்
மலர்மிசை யோனுமாலும் மறையோடு தேவர்
வருகால மான பலவும்
அலைகடல் மேருநல்ல அவைநல்ல நல்ல
அடியா ரவர்க்கு மிகவே.                      09


கொத்தலர் குழலியோடு விசயற்கு நல்கு
குணமாய வேட விகிர்தன்
மத்தமு மதியுநாகம் முடிமே லணிந்தென்
உளமே புகுந்த அதனால்
புத்தரொ டமணைவாதில் அழிவிக்கு மண்ணல்
திருநீறு செம்மை திடமே
அத்தகு நல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியா ரவர்க்கு மிகவே.                      10


தேனமர் பொழில்கொளாலை விளைசெந்நெல் துன்னி
வளர்செம்பொன் எங்கும் நிகழ
நான்முகன் ஆதியாய பிரமா புரத்து
மறைஞான ஞான முனிவன்
தானுறு கோளும்நாளும் அடியாரை வந்து
நலியாத வண்ணம் உரைசெய்
ஆனசொல் மாலையோதும் அடியார்கள் வானில்
அரசாள்வர் ஆணை நமதே.                   11


திருச்சிற்றம்பலம்

நன்றி


http://pathigam.blogspot.com

காதல் திருமணம்

செவ்வாய் - சனி ஒன்று அல்லது ஏழில் சம சதாப்ம
பார்வை பெற்றால் காதல் திருமணம், இவர்களை
குரு பார்த்தால் பெற்றோர் சம்மதம் தெரிவிப்பர்

குறிப்பு வழங்கியவர்

ஆற்காடு பாலசுந்தரம்

Wednesday, October 6, 2010

கேது மந்திரம் :

பலாச புஷ்ப ஸ்ங்காஸம்
தாரகா க்ரஹ மஸ்தகம்
ரௌத்ரம் ரௌத்ராத்மகம் கோரம்
தம் கேதும் ப்ரணமாம்யஹம்!

இராகுவின் மந்திரம் :

அர்த்காயம் மஹாவீர்யம்
சந்த்ராதித்ய விமர்தநம்!
ஸிம்ஹிகா கர்ப்பஸம்பூதம்
தம் ராஹூரும் ப்ரணாம்யஹம்

சனி மந்திரம் :

நீலாஞ்ஜந ஸமாபாஸம்
ரவிபுத்ரம் யமாக்ரஜம்
ச்சாயா மார்த்தாண்ட ஸம்பூதம்
தம் நவாமி சநைச்சரம்

சுக்ரன் மந்திரம் :

ஹிமகுந்த ம்ருணாளாபம்,
தைத்யாநாம் பரமம் குரும்
ஸர்வசாஸ்த்ர ப்ரவக்தாரம்
பார்கவம் ப்ரணமாம்யஹம்

குருவின் மந்திரம் :

தேவா நாஞ்ச ரி(ரீ)ணாஞ்ச
குரும் காஞ்சந ஸ்ந்(நி)பம்
புத்திதம் த்ரிலோகேஸம்
தம் நமாமி ப்ருஹஸ்பதிம்

புதன் மந்திரம் :

புதன் மந்திரம் :
ப்ரியங்கு கலிகா ஸ்யாமம்
ரூபேணாப்ரதிமம் புதம்!
ஸௌம்யம் ஸௌம்ய குணோபேதம்
தம்புதம் பிரணமர்மயஹம்

சந்திரன் மந்திரம் :

சந்திரன் மந்திரம் :
ததிசங்க துஷாராபம்
ஷீரோ தார்ணவ ஸம்பவம்
நாமம் சசிநம் ஸோமம்
சம்போர் மகுட பூஷணம்

சூரியனின் மந்திரம் :

ஜபா குஸீம சங்காசம்
காச்யபேயம் மஹாத்யுதிம்
தமோரிம் ஸர்வ பாபக்னம்
பரணதோஸ்மி திவாகரம்

Tuesday, October 5, 2010

ஜாதக பொருத்தம் ஏன்?

திருமணம் என்றாலே உடல் மட்டும் அல்ல. மனங்கள் இரண்டும் இரண்டறக் கலப்பதே ஆகும். மனங்கள் கலப்பது அவ்வளவு எளிய காரியம் அல்ல. நாம் வேலை பார்க்கும் இடத்தில் நமது சக ஊழியர்களில் சிலர் ஒத்துப்போகாவிட்டாலே எவ்வளவு சிரமம் உள்ளது என எல்லோரும் அறிந்ததே. கணவன் மனைவி உறவு என்பது ஆயிரம் காலத்துப் பயிர். அதாவது பயிரை வளர்க்க தேறிய விதைகள் மற்றும் சத்துள்ள நிலமும் இருந்தால் தான் அமோக அறுவடையை எதிர்பார்க்க முடியும். அதேபோலத்தான் இல்லறம் என்கிற பயிரை வளர்க்க ஆணும் பெண்ணும் உண்மையில் தகுதிதானா என அறிய வேண்டும்.

"சம்சாரம் கெட்டால் சன்யாசம்","மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்" ஆகிய பழமொழிகள் எந்த அளவு உண்மையானது என்பது மனைவியுடன் வாழும் கணவன்மார்களுக்கு புரியும். ஒருவனுக்கு நல்ல மனைவி கிடைத்தால் மகிழ்ச்சியான வாழ்க்கை. அதே பொருத்தம் இல்லாத மனைவியானால் அவன் ஒரு தத்துவ ஞானியாகிறான்.

பெற்றோரும் மாப்பிள்ளையும் பெண்ணைப் பார்த்த உடன் அவள் பணக்காரி, அழகுள்ளவள், படித்தவள், பதவி வகிப்பவள் என்பதை உடனடியாக அறிந்து கொள்ள முடியும். ஆனால் அவள் பண்புள்ளவளா? அன்புள்ளவளா? என அறிவது எப்படி? அவளுடன் வெகு நாட்கள் பழகிப் பார்த்தால் தான் தெரியும் அல்லவா? இதை நமக்கு தெளிவாக தெரிவிப்பதுதான் அவளது ஜென்ம ஜாதகம்.

ஒருவர் உண்மையான அன்புள்ளவரா என அறிய அவரது ஜாதகத்தை பார்த்தாலொழிய உடனடியாக தெரியாது. திருமணம் நல்ல முறையில் சிறந்து விளங்க ஜாதகப் பொருத்தம் மிக மிக அவசியமாகிறது. சரி, ஜாதகத்தின் மூலம் எப்படி அறிவது என பார்ப்போமா.

ஒருவரது ஜாதகத்தில் 1.2.4.5.7.9.10 இடங்கள் நல்ல முறையில் அமைந்தால் அவர் ஒரு யோகக்காரகர் ஆகிறார்.

ஆணின் ஜாதகத்தில் சூரியன் 3.6.10.11 ம் இடங்களில் இருந்தால் அவனை நம்பி பெண் கொடுக்கலாம். அந்த ஆண் ஆண்மை பொருந்தியவனாகவும், எதிரிகளை வெல்பவனாகவும், நல்ல தொழில் செய்பவனாகவும், லாபம் பெற்ற செல்வ சேர்க்கை உள்ளவனாகவும் இருப்பான்.

ஆண் ஜாதகத்தில் லக்னமும், வீர்ய ஸ்தானமான 3 ம் இடமும் கெடாமல் இருப்பின் அவனது ஆண் தன்மை உடனடியாக நிரூபணமாகிவிடும்.

ஒரு பெண்ணின் லக்னம் மற்றும் ராசி இரட்டைப்படி ராசியான பெண் ராசிகளில் அமைந்தால், அந்தப் பெண் மிகுந்த அன்பும் பண்பும் நிறைந்தவளாக இருப்பாள். ஒரு பெண்ணின் 4ம் ராசியும், 7ம் ராசியும் நன்றாக அமையப்பெற்றால், அவள் கற்புக்கரசியாக விளங்குவாள். பெண்ணின் ஜாதகத்தில் லக்னத்திற்கு 2ம் இடத்தில் சுபகிரகம் இருந்தால் அவள் தீர்க்க சுமங்கலி, அதாவது அவளது கணவருக்கு ஆயுள் பலம் அதிகமாக இருக்கும்.

ஆண் பெண் இருவரின் லக்னங்களும், ஜென்மராசிகளும் சஷ்டாஷ்டகம் பெறக்கூடாது. இருவரின் லக்னங்களும், ஜென்மராசிகளும் நட்பாக அமைந்தால் தம்பதிகள் வள்ளுவர் வாசுகி போல கருத்து ஒற்றுமையுடன் வாழ்வார்கள்.

ஜாதகத்தில் 7ம் அதிபதி, 6ல் இருப்பது நோயுள்ள களத்திரம் அமையும். 8ல் இருந்தால் தொடர் வியாதியுள்ள களத்திரம் எனலாம்.

7ல் ராகு இருப்பின் மாதவிடாய் மற்றும் கர்ப்பப்பை பாதிப்புள்ள மனைவி அமைவாள். 7ம் அதிபதி தீய கிரகங்களுடன் இருந்தாலும், சம்பந்தம் பெற்றாலும், 11ம் அதிபதி வர்க்கோத்தமம் அடைந்தாலும் இரு தார வாய்ப்பை தந்துவிடும்.

ஒருவர் ஜாதகத்தில் சுக்ரன் அதிகமாக வலுக்கவோ கெடவோ கூடாது.

2ம் மற்றும் 7ம் அதிபதிகள் தொடர்புகளும், 7 மற்றும் 9ம் அதிபதிகளின் தொடர்புகளும், சுக்ரன் மற்றும் 9ம் அதிபதிகளின் தொடர்புகளும் அதிர்ஷ்டம் உள்ள கணவன் அல்லது மனைவி வாய்க்கும் அமைப்பாகும்.

7ம் அதிபதி நீச்சம், 7ல் ராகு/கேது, 7ம் அதிபதி 6,8 ல் இருப்பது வரப்போகிற கணவன் அல்லது மனைவியால் பிரயோசனம் அதிகம் இல்லை எனலாம்.

மேற்கண்ட அமைப்புகளை ஜாதகத்தினைப் பார்த்து தெரிந்துக் கொண்ட பின்னர் மணமக்களின் நட்சத்திரங்களைப் பார்த்து பத்து வித பொருத்தங்களை முடிவு செய்தல் வேண்டும்.

Monday, October 4, 2010

சனி , சந்திரன்

சனி சந்திரன் சேர்க்கை அல்லது பார்வை இருந்தால்
அல்லது சனி சாரம் பெற்றால் திருமணம் தாமதம்
ஆகும்.
Deputy President, VARA

பதினோராவது வீட்டு அதிபதி

பதினோராவது வீட்டு அதிபதி ஆறு - எட்டு - பன்னிரண்டில்
இருந்தால் தரித்திரம் தலை தூக்கும்.ஆனால் இரண்டில்
இருந்தால் மிகுந்த வருமானம் மற்றும் மிகுந்த தொடர்புகள்.

தசப்பொருத்தங்கள்

1.தினப்பொருத்தம்:
மணமக்களின் உடல்நலத்தினை விருத்தி செய்கிறது.
இந்த பொருத்தம் இல்லையென்றால் டாக்டர் வீடே
கதி என்று இருக்க வேண்டும்.

2.கணப்பொருத்தம்:
மனிதரில் தேவம், மனுஷம், ராட்சஷம் போன்ற
குணங்கள் கொண்டவர்கள் இருக்கிறார்கள்.
இந்த பொருத்தம் அமையும் கணவன் மனைவிக்குள்
திருப்தி நிலை ஏற்பட்டு அயன, சயன, யோக,
பாக்ய என்கிற தாம்பத்ய உறவில் தென்றல் வீசும்.

3.மகேந்திரப்பொருத்தம்:
இப்பொருத்தம் அமையப்பெற்ற தம்பதிகளுக்கு
சற்புத்திரர்கள் பிறந்து அவர்களால் பாக்கியம்
பெறுவார்கள்.

4.ஸ்திரீ தீர்க்க பொருத்தம்:
பெண்கள் அஷ்ட ஜஸ்வர்யங்களுடன் தீர்க்க
சுமங்கலிகளாக வாழ்வார்கள்.

5.யோனிப் பொருத்தம்:
ஆண் பெண் புனிதமான அன்யோன்ய உறவில்
என்றும் நறுமணம் கமழ இப் பொருத்தம் அவசியம்.

6.ராசி அதிபதிப் பொருத்தம்:
கணவன் மனைவிக்குள் ஒற்றுமை நிலவ இது
உறுதுணையாக அமைகிறது. இதனால் குடும்ப
பிரிவினையை தடுக்க இயலும்.

7.ராசிப் பொருத்தம்:
இருவருக்குள் மாற்றுக்கருத்துக்கள் வராமல்
இருக்க இது உதவும்.

8.வசியப் பொருத்தம்:
ஒருவருக்கொருவர் வசியமாதல், அதாவது
கணவனோ அல்லது மனைவியோ சிறு சிறு
தவறுகள் செய்தாலும் கூட அவர்கள் மீது
ஏதோ இனம் புரியாத நெகிழ்ச்சி ஏற்படுத்தும்.
இது இல்லையென்றால் சக்களத்தி வரவும்
வாய்ப்புண்டு.

9.ரட்சுப் பொருத்தம்:
27 நட்சத்திரங்களை சிரசு, கண்டம், உதரம்,
தொடை, பாதம் என 5 வகையாக பிரித்து ஒரே
வகையுள்ள கணவன் மனைவி நட்சத்திரங்கள்
பொருந்தாது என அறிவித்துள்ளனர். இப் பொருத்தம்
மிக மிக முக்கியம். புருஷன் மற்றும் மனைவிக்கு
கண்டங்கள் இன்றி புத்திர சம்பத்துடன், செல்வ
நிலையுடன், ஸ்தல யாத்திரைகள் பல செய்து
இன்பமுடன் வாழ்வார்கள்.

10.வேதைப்பொருத்தம்:
இப்பொருத்தம் அமையப்பெற்றால் கணவன் மனைவிக்குள்
எதிர்மறையான கருத்துக்கள் வராது. இது அமையாத போது
கணவன் ஓரிடம் மனைவி ஓரிடம் என பிரிந்து வாழ்ந்தே
பெரும் நாட்கள் கழியும்.

முக்கிய குறிப்பு:
காதல் திருமணம் குரு நிர்ணயித்த திருமணம் தெய்வ
வாக்கு அமைத்த திருமணங்கள் கர்ப்பம் நிச்சிதமான
திருமணங்களுக்கு பொருத்தம் பார்க்காமல் திருமணம்
செய்விக்கலாம்.

மணமக்களுக்கு ஜாதகப்படியும் நட்சத்திரப்படியும்
பொருத்தங்களைப் பார்த்து இறை சிந்தனையுடன்
செய்யப்படும் திருமணங்கள் ஆல் போல் தழைத்து
அருகு போல் நீடித்து இன்பமுடன் வாழ வழி வகுக்கும்.

Friday, October 1, 2010

முகூர்த்த நாள் முக்கியத்துவம்

முகூர்த்த நாள் நிச்சயித்தலின் முக்கியத்துவம்
திருமணம் செய்வதற்கு ஒரு ஆணும் பெண்ணும் எப்படி அவசியமோ அதே போலத் தான் முகூர்த்த நாள் நிர்ணயிப்பதும். முகூர்த்தம் என்பது ஒன்றரை மணி நேர அளவுள்ள காலமாகும். ஒரு குழந்தையின் வளர்ச்சி, ஆரோக்கியம், புகழ், ஆயுள் போன்றவற்றைப் பார்க்க எப்படி குழந்தையின் ஜனன ஜாதகம் அவசியமோ அதே போல நாம் செய்யப்போகும் திருமணம் அந்த அளவிற்கு அவர்களின் கணவன் மனைவி பந்தம் தொடரும். சமுதாயத்தில்அவர்கள் வாழ்க்கை சிறக்கும். இருவருக்கும் உள்ள அன்னியோன்யம் குழந்தைப்பேறு முதலிய பல நிகழ்வுகள் நல்லபடியாக அமைவதற்கு முகூர்த்த நாள் மற்றும் நேரம் நிர்ணயம் அவசியமாகிறது.
மணமக்களின் ஜாதகங்களில் ஒரு சில குறைகள் இருந்தாலும் இந்த முகூர்த்த நேர லக்னம் நன்கு அமையுமானால் அந்தக் குறைகள் தெரியாமல் போகிறது. நாள் செய்வதை நல்லோரும் செய்யார். நல்லவர்களாலும் செய்ய முடியாததை நல்ல நாள் பார்த்து எந்தவொரு வேலையையும் செய்தோம் என்றால் அந்த வேலையை சிறந்த முறையில் நவக்கிரகங்கள் நமக்கு அமைத்துக் கொடுத்துவிடும். மணமக்கள் இருவர் ஜாதகங் களையும் ஒப்பிட்டுப் பார்த்து இவர்களுக்கு திருமணம் செய்விக்கலாம் என்று ஜோதிடர்கள் தெரிவித்த பின்பு, இருவர் வீட்டில் உள்ள அனைவரும் சம்மதம் தெரிவித்த பின்னர் திருமண முகூர்த்த நாளை தேர்வு செய்ய முற்படவேண்டும்.
திருமணம் ஒருவருக்கு செய்ய முயலும் போது முதலில் அவரது நட்சத்திரத்தின்படி குருபலம் உள்ளதா என்று அறிய வேண்டும். குருபகவான் அவரவர் ஜென்ம ராசிக்கு 2, 5, 7, 9, 11 ம் இடங்களில் பிரவேசம் செய்யும் போது குரு பலம் இருப்பதாக கருதப்படுகிறது.
குருபகவான்
2 ல் இருக்கும் போது திருமணம் செய்வித்தால் அந்த தம்பதியருக்கு தனசம்பத்துகள் கிடைக்கும்.
5 ல் குரு இருக்கும் போது திருமணம் நடந்தால் சொற்படி நடக்கும் சத்புத்திரர்கள் பிறப்பார்கள்.
7ல் குரு இருந்தால் பெண்கள் என்றும் தீர்க்கசுமங்கலியாக இருப்பார்கள்.
9ல் இருக்கும்போது கணவருக்கு சகல செல்வாக்கும்,
11ல் குரு தங்கும் போது திருமணம் செய்தால் மனைவி அல்லது கணவன் மூலம் செல்வங்கள் பல வந்து சேரும்.
குருபலம் ஆண் பெண் இருவருக்கும் இருப்பின் மிக்க நலம். இதில் பெண்ணிற்கு மட்டுமாவது இருப்பது இன்றியமையாதது. குருபலம் போலவே சூரிய பலமும் சிறிது முக்கியமாக கருதப்படுகிறது.
சூரிய பலம் என்பது ஒருவரின் ஜென்ம ராசிக்கு சூரியன் 3, 6, 10, 11 ம் இடங்களில் பிரவேசம் செய்வதே ஆகும். சூரிய பலம் பெண்ணைவிட ஆணுக்கு மிக முக்கியமாக கருதப்படுகிறது.
திருமணக்காலங்கள் மணமக்களுக்கு யோகாதிபதிகளின் தசாபுக்திகளாக அமைந்தால் அந்தத் திருமணம் சீரும் சிறப்புமாக அமையும். மணமக்கள் இருவருக்கும் குருபலம் இல்லாத சமயத்தில் இவர்களுக்கு சுக்ரன், அல்லது 2, 7, 11 ம் அதிபதிகளின் தசாபுக்திகள் நடந்தாலும் திருமணம் செய்விக்கலாம். மணமக்களுக்கு அ~;டம சனி காலத்திலும் விரய சனி நேரத்திலும் திருமணத்தை தள்ளிப்போடுவது சிறப்பை தரும். குருபலம், சூரியபலம், நல்ல தசாபுக்தி மற்றும் சனிபகவானின் தாக்கம் இல்லாத காலங்களை தேர்ந்தெடுத்த பின்னர் ஒரு நல்ல நாளை கீழ்கண்டவாறு தேர்வ செய்யலாம்.

1. சித்திரை, வைகாசி, ஆனி, ஆவணி மற்றும் தை மாதங்ளை
தேர்வு செய்து இவைகளில் மலமாதம் இல்லாத மாதத்தை
தேர்ந்தெடுக்க வேண்டும்.
2. வளர்பிறையின் துவிதியை, திரிதியை, பஞ்சமி, சப்தமி மற்றும்
திரயோதசி உள்ள நாட்கள்.
3. இருவர் நட்சத்திரத்திற்கும் தாராபலம் ஏற்றார்போல் உள்ள
நாட்கள்.
4. அன்றைக்கு சந்திரன் ஐன்ம ராசிக்கு 1, 3, 6, 7, 10, 11 ராசிகளில்
இருப்பது.
5. இரு கண்ணுள்ள நாட்களான புதன், வியாழன் மற்றும்
வெள்ளிக்கிழமைகள் சிறந்தது. ஒரு கண்ணுள்ள நாட்களான
ஞாயிறு மற்றும் திங்கள் பாதி சிறந்தது. குருட்டு நாட்களான
செவ்வாய் சனியை தவிர்ப்பது உத்தமம்.
6. அக்னி ராசிகளான சிம்மம் மற்றும் மே~ம் முகூர்த்த லக்னமாக
இல்லாது இருப்பது.
7. முகூர்த்த லக்னத்திற்க்கு 7, 8 இடங்கள் திதி சூன்ய ராசிகளாக
அமையாமல் இருப்பது.
8. முகூர்த்த லக்னத்திற்க்கு ஏழாமிடம் சுத்தமாக இருப்பின் நல்ல
கணவன் மனைவி அமையும். எட்டாம் இடம் சுத்தமாயின்
நீடித்த திருமணபந்தம். 12ம் இடம் சந்தோ~த்தை குறிக்கின்றது. .
ஆக 2,7,8ம் இடங்கள் சுத்தமாக இருக்க வேண்டும் மற்றும்
எட்டாம் இடத்தை குரு அல்லது சுக்ரன் பார்க்கலாமேவொழிய
இந்த இடங்களில் இவர்கள் யாரும் இருக்கக்கூடாது.
9. உபஜெய ஸ்தானங்களான 3, 6, 11 ல் தீய கிரகங்கள் இருப்பது
வாழ்க்கையின் வெற்றி மற்றும் ஆதாயங்களை குறிக்கும்.
10. திருமணநாள் மணமக்களின் ஜென்ம நட்சத்திரமாகவோ,
ஜென்ம கிழமையாகவோ அமையாமல் இருப்பது மிக நல்லது.
11. நவக்கிரகங்களில் அதிக சுபத்தன்மை பொருந்திய குருவும்
சுக்ரனும் மூடம் என்கின்ற அஸ்தங்க தோ~ம் அடைந்திருக்க .
கூடவே கூடாது.
12. ராகு காலம் மற்றும் ஏமகண்டம் போன்ற வி~நேரங்களை .
ஒதுக்க வேண்டும். குளிகை காலத்தைக் கூட தவிர்ப்பது
சிறந்தது. காரணம் குளிகை காலத்தில் செய்யும் காரியங்கள் .
திரும்பவும் செய்ய நேரிடலாம்.
13. மொத்தம் உள்ள பதினோறு கரணங்களில் அசுப கரணங்களை
ஒதுக்கவேண்டும். சித்தயோகத்தை மாங்கல்ய தாரணத்திற்கும்
அமிர்தயோகத்தை சாந்தி முகூர்த்தத்திற்க்கும் தேர்வு செய்தல்
வேண்டும்.
14. “பஞ்சகம்” என்ற முறையில் நல்ல நாளை தேர்வு செய்ய .
வேண்டும். பஞ்சக முறையில் பார்த்தால் வருடத்திற்க்கு மிக
குறைந்த முகூர்த்த நாட்களே வரும். எனவே இதற்கு
பரிகாரமாக இரத்தினம், சந்தனம், எலுமிச்சை, தீபம் மற்றும்
தானியம் முதலியவைகளை துணிமணிகளுடன் சேர்த்து தானம்
செய்யவேண்டும்.
15. பெண்ணிற்கு மாதவிலக்குக்கு உரிய நாட்களாக அமையாமல்
இருப்பது அவசியம். ஏனென்றால் இதில் புனிதமான அக்னியை
வார்த்து இறைவனை அதில் வரவழைத்து வணங்குகிறோம்.
16. திருமணம் செய்ய இருக்கும் நாளுக்கு 15 தினங்கள் முன்பு
அவரவர் குலதெய்வத்திற்கு பொங்கலிட்டு ஆராதனைகள் செய்து
பிறகு முன்னோர்களை தியானித்து அனுமதி பெறவேண்டும்.

இப்படி அமையும் திருமண உறவு என்றும் நிலைத்திருப்பதுடன், ஒருவரையொருவர் விட்டுத் தராமல் அன்புடன் இல்லற இன்பம் பெறுவார்கள் என்பது ஜோதிட ரகசியங்களில் ஒன்றாகும்.

(வாசகர்கள் ஜாதகம், ஜோதிடம் சம்பந்தமான கேள்விகளை அனுப்பலாம்)

7th Lord in 6 or 8

ஏழாவது இடத்து அதிபதி ஆறு அல்லது எட்டு
அதிபதியுடன் பரிவர்த்தனை (7th Lord in 6 or 8)
பெற்றால் வியாதியுள்ள கணவன்/மனைவி
அமைவார்.

கெட்ட கிரகம், விபரீத ராஜயோகம்.

ஒரு கெட்ட கிரகம் வக்கிரம் பெற்று
ஆட்சி அல்லது உச்சம் பெற்றால் தான்
தங்கிய வீட்டை நாசம் செய்துவிடும். ஆனால்
இதுவே 6 - 8 - 12 இல் அமைந்தால் விபரீத
ராஜயோகம்.

ரவிராஜன், சி.எம்.சி.

திருக்குறள்

இலவச ஜோதிட ஆலோசனை

இலவச ஜோதிட
ஆலோசனைக்கும் தங்களது ஜோதிடம்
தொடர்பான சந்தேகங்கட்கும்
தெளிவுரைகட்கும் தங்களுக்கு மிக
முக்கியம் எனத்
தோன்றும் ஒரு
கேள்வி மட்டும்
கேட்கவும் கேள்வியினை
அனுப்பவேண்டிய மின்னஞ்சல் முகவரி
vedicastrovellore@gmail.com
or
jothidananban@gmail.com

Free Astrology Suggestions

Free Astrology suggestion/solution:

Clear your astrology doubts & clarification

ONLY ONE QUESTION.

contact-

vedicastrovellore@gmail.com

jothidananban@gmail.com