Thursday, December 30, 2010

ஜோதிடப்பழமொழிகள் -22



கும்பத்து வெள்ளி குடம் கொண்டு சாய்க்கும்
கும்ப ராசியில் அமரும் சுக்ரன்
பல நற்பலன்களை வாரி வழங்குவான்.

குறிப்புதவி
ஜோதிடஸ்ரீ  ரவிராஜன், சி.எம்.சி


Wednesday, December 29, 2010

ஜோதிடப்பழமொழிகள் -21



மகத்துப் பெண் – பூரத்துப் புருஷன்
மயில் கண்ணுக்கு அதிக மசக்கை
மாப்பிள்ளைக்கு அவஸ்தை

குறிப்புதவி
டி.ரகுநாதன். திருச்சி

Tuesday, December 28, 2010

ஜோதிடப்பழமொழிகள் -20



பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது,
புதன் ஒரு மங்களகரமான
நாளாகும். இதனை கருத்தில்
கொண்டே இப்பழமொழி நிலவுகிறது.
(அந்த காலத்துப் பொன் விலையை
கருத்தில் கொண்டு என்பதையும்
கூடுதல் கவனமாக கொள்ளலாம்).


Monday, December 27, 2010

ஜோதிடப் பழமொழிகள் 19




கும்பத்து வெள்ளி குடம் கொண்டு சாய்க்கும்

கும்பத்தில் சுக்ரன் இருந்தால் மிகப்
பல நல்ல பலன்களை தருவான்.

குறிப்புதவி
ஜோதிடஸ்ரீ ரவிராஜன், சி.எம்.சி.

Sunday, December 26, 2010

ஜோதிடப் பழமொழிகள் 17,18



மேஷ ராகு மேன்மையை கொடுக்கும்

துலா கேது தொல்லை தீர்க்கும்


குறிப்புதவி
ஜோதிடஸ்ரீ ஜெயராதே

Saturday, December 25, 2010

ஜோதிடப் பழமொழிகள் 16



சித்திரையில் பிறந்தவன் தெருவில் திரிவான்

சித்திரையில் பிறந்தவர் பணியானது சுற்றித் திரியும்
பணியாக அமையும்

குறிப்புதவி
ஜோதிடஸ்ரீ ஜெயராதே


Friday, December 24, 2010

ஜோதிடப் பழமொழிகள் 15



சுவாதி சுக்ரன் ஓயா மழை

சுக்ரன் சுவாதி நட்சத்திரத்தில் வரும் போது
ஓயா மழை பொழியும்.

குறிப்புதவி
ஜோதிடஸ்ரீ ரவிராஜன், சி.எம்.சி.

Thursday, December 23, 2010

ஜோதிடப் பழமொழிகள் 14



மறைந்த புதன் நிறைந்த கல்வி

புதன் எட்டில் மறைந்தால் நிறைந்த கல்வி உண்டு.

குறிப்புதவி
கேசவன், ஈரோடு

Wednesday, December 22, 2010

ஜோதிடப் பழமொழிகள் 13



சித்திரை மாதம் செல்வன் பிறந்தால் சீரும் சிறப்பும் கெடும்

சித்திரையில் செல்வன் பிறந்தால் ஏழ்மை வரும்.

குறிப்புதவி
புருஷோத், சி.எஸ்.சி, வேலூர்

ஜோதிட மாநாடு

                      ஜோதிட மாநாடு
                       நாள்: 25-12-2010
                   கிழமை: சனிக்கிழமை
       நேரம்: காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை
            இடம்: புவனேஸ்வரி கல்யாண மண்டபம் 
                   சத்துவாச்சாரி, வேலூர்,
       தலைமை: ஜோதிட தென்றல் செல்வராஜ் அவர்கள்,
                  அவினாசி
தமிழகம், ஆந்திரா மற்றும் கர்னாடக ஜோதிடர்கள்
பங்கேற்கின்றனர். வேலூர் மற்றும் அதன் அருகே உள்ள
அன்பர்கள் இதனையே அழைப்பாக ஏற்று மாநாட்டில்
பங்கேற்க அன்புடன் அழைக்கிறோம்.
                                       இவண்
                                 எம்.பாலசுப்ரமணியன்,
                              நிறுவனர் மற்றும் தலைவர்,
                      வேலூர் ஜோதிட ஆராய்ச்சியாளர்கள் சங்கம்,
                                  பாகாயம், வேலூர்


Monday, December 20, 2010

ஜோதிடப் பழமொழிகள் 12



பத்தில் குரு வந்தால் பதவி பறி போகும்

ஜென்ம ராசிக்கு பத்தில் கோசார குரு
வந்தால் பணி மாற்றம் உண்டு

குறிப்புதவி
ஜோதிடஸ்ரீ சாமு


Tuesday, December 14, 2010

ஜோதிடப்பழமொழிகள் 11




விதி போகும் வழியே மதி போகும்.

லக்னம் எப்படியோ அப்படியே மதி போகும்

குறிப்புதவி
புருஷோத், வேலூர்

எட்டாம் பொருத்தம்




ஷஷ்டாஷ்டக ராசிகளில் கணவன் மனைவி
ராசிகள் அமைந்தால் இருவருக்குமிடையே
பல விஷயங்களிலும் ஒற்றுமையின்மை
நிலவும்.

குறிப்புதவி
பாலசுந்தரம்,,ஆற்காடு.

ஜோதிடப்பழமொழிகள் 10




அவிட்டம் தொட்டால் தொட்டது தங்கமாகும்.
(அவிட்டம் , தவிட்டுப்பானையிலே பணம்
என்றும் கூறுவர்.)

அவிட்ட நட்சத்திரக்காரர் பணம் சம்பாதிக்கும்
வழி வகைகளை நன்கு அறிந்தவராக இருப்பார்.

குறிப்புதவி
ஜோதிடஸ்ரீ சாமு

ஜோதிடப்பழமொழிகள் 9




இரவில் செய்தாலும் அரவில் செய்யாதே

இரவில் கூட செயலைச் செய்யலாம். ஆனால்
ராகு காலத்தில் மட்டும் செய்யக்கூடாது.

குறிப்புதவி
ரவிராஜன், சி.எம்.சி.

ஜோதிடப்பழமொழிகள் 8




கேட்டை கோட்டை கட்டும்

கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவருக்கு
கண்டிப்பாக சொந்த வீடு/ ந்ண்பர்கள் குழாம்/
ரசிகர்கள் உண்டு.

குறிப்புதவி
கேசவன், ஈரோடு

ஜோதிடப்பழமொழிகள் 7



அந்தணன் தனித்து இருந்தால்
அவதிகள் அதிகம் உண்டு

ராசியில் குரு தனித்து இருந்தால்
அவதிகள் அதிகம் உண்டு

குறிப்புதவி
ஏ.பா.வேணுகோபால்
முதுநிலை கணக்காளர்

Tuesday, December 7, 2010

ஜோதிடப்பழமொழிகள் - 6



கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம்

கெட்ட கிரகஙகள் ஆறு எட்டு பன்னிரண்டு
ஆகிய இடங்களில் மறைந்தால் ராஜயோகத்தினை
அளிக்கும்.

ஜோதிடப்பழமொழிகள் - 5



சிம்மத்தில் ராகு சிம்மாசனத்தில் அமர வைப்பார்.

நல்ல பதவி/ நல்ல தொழில் அளிப்பார்,

குறிப்புதவி
ஜோதிடஸ்ரீ ஆறுமுகம். எஸ்.


Monday, December 6, 2010

ஜோதிடப்பழமொழிகள் - 4



சுக்ர திசை சுழட்டி அடிக்கும்.

சுக்ரன் ஒரு சில லக்னத்த்ற்க்கு நல்லவனாகவும்
ஒரு சில லக்னத்திற்க்கு கெட்டவனாகவும் இருப்பார்.
இதன் படி பலன்கள் அமையும்.

குறிப்புதவி
ஜோதிடஸ்ரீ ஜெயராதே

ஜோதிடப்பழமொழிகள் - 3




உத்திரத்தில் ஒரு பிள்ளையும்
ஊர் ஓரத்து தோப்பும் நன்மை தரும்.

உத்திரத்தில் பிறந்த மகன்
தகப்பனாருக்கு உதவுவான்.

குறிப்புதவி
ஜோதிடஸ்ரீ சாமு

ஜோதிடப்பழமொழிகள் - 2




ஆண் மூலம் அரசாளும்

ஆணி மாதம் பிறந்த ஆண் குழந்தை
அவன் குடும்பத்தை ஆளுவான்.

குறிப்புதவி
விஜயகுமார்,
Ex All India Radio,
Trichy 


ஜோதிடப்பழமொழிகள் - 1




மகத்துப் பெண் முகத்துக்கு ஆகாது

மகத்தில் பிறந்த பெண் வெளிப்படையாக , நேரடியாக
பேசுபவராக இருப்பார். முகமும் கடுமையான
குணம் கொண்டவராக தெரியும்

குறிப்புதவி
ஜோதிடஸ்ரீ ரகுநாதன்
திருச்சி.

ஜோதிடப்பழமொழிகள்




ஜோதிடப்பழமொழிகள் பேச்சு வழக்கில்
பல உள்ளன. மேம்போக்காக இதன் பொருள்
வேறு. ஆனால் உண்மையான் பொருள் வேறு.
இவைகளில் சிலவற்றினை இனி வரும்
பதிவுகளில் பார்க்கலாம். பதிவர்கள்
மற்றும் வாசகர்கள் தங்களுக்கு தெரிந்த
ஜோதிடப் பழமொழிகள் மற்றும் அதற்கான
விளக்கங்களை அனுப்பி வைப்பின் அவைகளும்
இங்கு இடம் பெறும். அனுப்ப வேண்டிய மின்
அஞ்சல் முகவரி    velloreastro@gmail.com

Monday, November 29, 2010

சனி

சனி ஏழில் இருந்தால் ஜாதகருக்கு 
ஜாதகரைவிட 
வசதி குறைவான / 
அழகு குறைவான /
படிப்பு குறைவான 
மனைவி அமைவாள்.

குறிப்புதவி 
அவிட்டம் ஸ்ரீனிவாசன் 

அதிக பெண் குழந்தைகள் யாருக்கு?

ஐந்தில் சனி அல்லது சுக்ரன் அல்லது
 ராகு இருப்பின் அதிக பெண் குழந்தைகள் 
பிறக்க வாய்ப்புண்டு 

குறிப்புதவி
ராஜேஷ் , சென்னை 

Sunday, November 28, 2010

அரசுப் பணி


பலமுள்ள சூரியனை குரு பார்த்து , செவ்வாய் மற்றும் 
லக்ன அதிபதி பலம் பெற்றால் ஜாதகர் எளிதாக அரசுப் 
பணியில் அமர்ந்து விடுவார். 
குறிப்புதவி
ரகுநாதன், திருச்சி.  

சூரியன்


சூரியன் லக்னத்திற்கு 3 - 6 -10௦ -11 இல் இருந்தால் 
அந்த ஜாதகர் பணம் சம்பாதிக்கும் வழி அறிந்தவராக 
இருப்பார். நல்ல வேலை அல்லது தொழில் அமையும். 
குறிப்புதவி
இலக்கியா 

பௌர்ணமி




பௌர்ணமியில் பிறந்த ஜாதகரது பெற்றோர் இடையே 
எப்போதும் சச்சரவு இருக்கும். மனைவியும் மிக 
கோபக்காரராக இருப்பார்.  ஜாதகர் மனைவிக்கு 
அடங்கியவராக இருப்பார்.


Wednesday, November 24, 2010

அம்மாவாசை

அம்மாவாசையில் பிறந்தவர்கள் நல்ல பேச்சு திறமை,
ஓவியத் திறமை, வாகனங்கள் பழுது பார்த்தல், நுண் கலை
தேர்ச்சி பெற்று விளங்குவர்.

கடகம் மற்றும் மீனம் 

நீர் ராசிக்காரர்களான கடகம் மற்றும் மீன ராசிக்காரர்கள்
நண்பர்களாகவோ, கணவன் மனைவியாகவோ இருப்பின்
மிகுந்த அன்யோன்யம், நட்பு, ஒருவரை ஒருவர் புரிந்து
செயல்படுதல் நிலவும்.

Monday, November 22, 2010

குரு




குரு உச்சம் பெற்று சந்திரனை பார்த்தால் ஜாதகர்
நீண்ட ஆயுள் உடையவர், நல்ல உடல் வாகு
உடையவராயிருப்பார்.

குறிப்புதவி.
ஜெயராதே, துணைத் தலைவர், VHRA

லக்ன அதிபர்




லக்ன அதிபர் கெட்டவராக இருந்துவக்கிரம் அடைந்து
அல்லது கெட்ட கிரகங்கள் லக்னத்தில் இருந்து
குரு பார்வை இல்லாமல் இருப்பின் ஜாதகர்
பிறர்க்கு இன்னல் விளைவிப்பார், சதி திட்டம் தீட்டுவார்,
பிறர் மனதினை புண்ணாக்குவார்.

மேஷ லக்னம்




மேஷ லக்னத்திற்கு குரு தசா/குரு புக்தி மிக
யோகமானது. சுப செலவுகள் மற்றும்
மகிழ்ச்சி நிலவும்.

குறிப்புதவி
ஜோதிடஸ்ரீ கேசவன், ஈரோடு

ஆறாம் வீட்டு அதிபதி

ஆறாம் வீட்டு அதிபதி சுபருடன் சேர்க்கை/பார்வை
சுப ஸ்தானத்தில் இருந்தால் பகைவனும்
நண்பனாவான்.


குறிப்புதவி
ஜோதிடஸ்ரீ ரகுநாதன், திருச்சி

குரு




குரு எட்டில் இருந்தாலும் அல்லது கோசார குரு
எட்டில் வந்தாலும் ஹெர்னியா / ஹைட்ரோசில்
பிரச்சனைகள் வரலாம்.

குரு பெயர்ச்சி யாருக்கு எப்படி?

மேஷ ராசிக்கு
புதிய வீடு, வாகனம் வாங்கும் யோகம்

ரிஷப ராசிக்கு
மங்கல நிகழ்ச்சிகள் உண்டு சந்தோஷம்

மிதுன ராசிக்கு
வேலையில் கவனம் தேவை உஷார்

கடக ராசிக்கு
கடன் வாங்க வேண்டாம் கவனம்

சிம்ம ராசிக்கு
பேங்க் பேலன்ஸ் குறையும்

கன்னி ராசிக்கு
சம்பளம் உயரும், உடல் நலம் சுமார்

துலாம் ராசிக்கு
கடவுள் நம்பிக்கை தேவை

விருச்சிக ராசிக்கு
பிள்ளைகளால் பெருமை

தனுசு ராசிக்கு
கடன் வாங்கும் தேவை கவனம்

மகர ராசிக்கு
முயற்ச்சிகள் தாமதம் பொறுமை

கும்ப ராசிக்கு
பணத்தை குவிப்பீங்க கலக்குஙக

மீன ராசிக்கு
மருந்துக்கு செலவுண்டு கவனம்

Tuesday, November 16, 2010

புதன்



ஒன்று மற்றும் ஐந்தில் புதன் கெடாமல் இருக்கும்
பெண்கள் குடும்ப விளக்காக இருப்பார்கள்.

குறிப்புதவி
ஜோதிட சிரோண்மணி சிவராஜ்.டி, ரத்தினகிரி.

குரு



ஜாதகத்தில் குரு இருக்கிற இடத்தைப் பொறுத்தும்
ஜாதகத்தின் பத்தாம் அதிபதியான ஜீவனாதிபதி
பலத்தைப் பொறுத்தும் வங்கியில் வேலை கிடைக்கவோ
நிதி நிறுவனம்  துவஙகவோ வாய்ப்பு கிடைக்கும்.
மேலும் ஆசிரியர் பணி, கோயில் அர்ச்சகர் பணி,
தர்ம நிறுவனஙகள் துவங்குதல் ஆகியவற்றுக்கும்
இவரே பொறுப்பு.

உணவும் கிரகங்களும்




இனிப்பு வகை பிரியரா நீஙகள் ,
அப்போது நீஙகள்
சுக்ரன்/குரு/சந்திரன்
ஆளுமை கொண்டவர்

மசால் வடை பிரியரா நீஙகள் ,
அப்போது நீஙகள்
செவ்வாய்/சூரியன்
ஆளுமை கொண்டவர்

பாயாசப் பிரியரா நீஙகள் ,
அப்போது நீஙகள்
ராகு/புதன்
ஆளுமை கொண்டவர்

உணவில் விருப்பம் இல்லாதவரா நீஙகள் ,
அப்போது நீஙகள்
சனி/கேது
ஆளுமை கொண்டவர்

கோச்சார குரு



கோச்சார குரு ஒன்பதாவது ராசிக்கு வந்தாலோ அல்லது
8வது, 17வது, 26 வது நட்சத்திரத்திற்கு வந்தாலோ
மிகுந்த மகிழ்ச்சி மற்றும் உற்சாகத்தினைக் கொடுப்பார்.

திருமண வாழ்க்கை



லக்ன/ராசிக்கு ஆறு/எட்டு அதிபதிகள் ஒன்று அல்லது
ஏழில் இருப்பின் திருமண வாழ்க்கை சிரப்பாக இருக்காது.

குறிப்புதவி
ஜோதிடஸ்ரீ  தேவசேனா, சி.எம்.சி.

படிக்காத மேதை



.
கேது இரண்டு அல்லது நான்கில் இருந்து அதன்
பாதிப்பு இருந்தாலும், லக்னத்தில் புதன் கெடாமல்
இருந்து, குரு பார்வை பெற்றால்  - படிக்காத மேதை.

சனி




சனி ஐந்தில் இருப்பின் சுகம் பாராமல் காரியம்
செய்வார்  - சுய சிந்தனையாளர் பிற்கால ஞானி.

குறிப்புதவி
ஜோதிடஸ்ரீ  இலக்கியா  வேலூர்

Friday, November 12, 2010

குரு பெயர்ச்சி மகாயாகம்


வேலூர் ஜோதிட ஆராய்ச்சியாளர்கள் சங்கத்தின்
சார்பில் குரு பெயர்ச்சி மகாயாகம் 22-11-2010
திங்கட்கிழமை காலை ஆறு மணி முதல் பிற்பகல்
ஒரு மணி வரை வேலூர் டோல்கேட் நாதன்மகாலில்
வேலூர் யாக செம்மல் ஸ்ரீ மோகன்குமார் ஷர்மா குழுவினர்
தலைமையில் நடைபெற உள்ளது. வேலூர் மற்றும் அதன்
சுற்றுப்புறம் உள்ளோர் யாகத்தில் கலந்து கொண்டு பயன்
பெற வேண்டுகிறோம். மேலும் தகவல் பெற கீழ்க்கண்ட
சங்க நிர்வாகிகளை தொடர்பு கொள்ளவும்.
திரு கே.ஷண்முகம்   9488039162
திரு டி.ரவிக்குமார்    9952102135
திரு எஸ்.ஆறுமுகம் 9442806440
திருமதி ஆர். ஜெயராதே 9952532658

பஞ்சாங்கம்


பஞ்சாங்கத்தில் இரண்டு வகையுண்டு
திருக்கணிதம் ஜாதகப்பலன் கூறவும்
வாக்யம் பூஜா கொண்டாடவும்
பயன்படும்

காதல்

லக்னத்திற்க்கு பன்னிரண்டில் குரு இருப்பின்
ஜாதகருக்கு காதல் மற்றும் கட்டாயத் திருமணம்
நடைபெற வாய்ப்புண்டு.  

பானை வயிறு


லக்னத்திற்க்கு ஆறில்,  குரு அல்லது சுக்ரன்
அல்லது சந்திரன் உள்ள அமைப்பு பானை
போன்ற வயிற்றினை தரும். (தொப்பை உள்ளோர்
அதிகமாக உள்ளதின் ரகசியம் இப்போதாவது
தெரிகிறதா ! )

மூத்த சகோதரர்/சகோதரி


பதினொன்றாவது அதிபதி எட்டில் இருந்தால்
ஜாதகரது மூத்த சகோதரர்/சகோதரி நல்ல பதவி
மற்றும் வசதியுடன் இருப்பார்கள். ஆனால்
அதனால் ஜாதகருக்கு பயன் இல்லை.

சூப்பர் சிங்கர்


மூன்றாவது அதிபதி ஆட்சி/உச்சம் பெற்று சுக்ரன்
மற்றும் சந்திரன் பலம் பெற்றால் சங்கீதத்தில்
சூப்பர் சிங்கர்
குறிப்புதவி
ஜெயராதே, துணைத்தலைவர்

மறு பிறவி

கேது பன்னிரண்டிலோ அல்லது பன்னிரண்டாவது அதிபதி
நல்லவராகி ஆட்சி மற்றும் குரு பார்வை பெற்று இருந்தாலோ
அந்த ஜாதகருக்கு மறு பிறவி இல்லை.
குறிப்புதவி
ஜோதிடசிரோன்மணி எஸ்.மனோகரன்.

ஜோதிடக்குறிப்புகள்


ஜோதிடக்குறிப்புகளை குறுஞ்செய்தி வாயிலாக உங்களது
அலைபேசிக்கு பெற விரும்பினாலோ அல்லது உங்களது
நண்பருக்கு அனுப்பிட விரும்பினாலோ, உங்களது பெயர்
அல்லது நண்பரின் பெயர் மற்றும் அலைபேசி எண்ணை
குறிப்பிட்டு 9443540743 என்ற எண்ணுக்கு  குறுஞ்செய்தி
அனுப்பவும்.

சனி


சனி இரண்டில் கெட்டு இருந்தால் சனி தசை
சனி புக்தியில் புத்தி மாறி வீட்டை விட்டு
போவார்கள்.
குறிப்புதவி
ஜோதிடஸ்ரீ தேவசேனா, சி.எம்.சி.

Thursday, November 4, 2010

லட்சுமி குபேர பூஜை

தீபாவளி நாளில், திருப்பதி பெருமாளுக்கே கடன் அளித்த குபேரனையும் மகாலக்‌ஷ்மியையும் விஷேஷமாக வழிபடுவது நம் நாட்டில் பொதுவான வழக்கம்.
நகைக்கடைகளில் இந்த பூஜைக்கென்றே பிரத்யேகமாக சிறிய அளவில் வெள்ளிக்காசுகளை அர்ச்சிப்பதற்க்காக விற்கின்றனர்..
அந்தக் காசுகளால் இருவரையும் அர்ச்சித்து, பூஜை முடிந்தவுடன் வடை பாயாசம் இனிப்பு வகைகளை பிரதாமக வழஙகலாம்.
இப்பூஜை செய்தால் குபேரன் திருவருளும், மகாலக்‌ஷ்மியின் திருவருளும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.   

தீபாவளி


தீபாவளி நாளன்று ஆதி சஙகரர் அருளிய கங்காஷ்டக ஸ்லோகத்தினை
பாராயணம் செய்தால் நம்மை பீடித்திருந்த பாவஙகளும், நம் வெற்றிக்கு குறுக்கே வரும் தடைகளும் விலகிப் போகும் என்பது நம்பிக்கை.
நம்பிக்கை உள்ளோர்க்காக  ஆதி சஙகரர் அருளிய கங்காஷ்டக ஸ்லோகம்
ப்ரஹ்மாண்டம் கண்டயந்தி
ஹரசிரஸி ஜடாவல்லிமுல்லாசயந்தி
ஸ்வர்லோகாதாதாப தந்தி
கனக கிரி குஹா கண்ட சைலாத் ஸ்கலந்திறு
சோணிப்ப்ருஷ்டே லுடந்தி துரிதசய
சமுர் நிர்பரம் பர்த்சயந்தீ
பாதோதிம் பூரயந்தி ஸுரநகர ஸரித்
பாவனீந புநாது

குரு பலம்

திருமணம் என்றவுடன் அனைவரும் கேட்பது குரு பலம் உள்ளதா என்றுதான். காரணம் குரு பலம் உள்ள காலம், திருமணத்திற்க்கு ஏற்ற காலம் மட்டுமல்ல, அதற்க்காக எடுக்கும் முயற்ச்சியும் தடையில்லாமல் நன்மையாக முடியும்.  எனவேதான் திருமணம் செய்யும் காலத்தில் குரு பலம் பார்க்கிறார்கள்.
குரு ராசிக்கு ,2,5,7,9,11 ஆகிய இடங்களில் வரும் காலத்தில் அதிக நன்மை அளிப்பதால் குரு பலம் என்கிறோம். மேலும் அந்த இடஙகளில் இருந்து தனது 5,7,9 பார்வையாக பார்க்கும் இடமும் நன்மை அளிக்கிறது.
குரு இரண்டாமிடத்தில் வரும்போது குடும்பம் அமையவும், தன சம்பத்துக்கள் சேரவும் வாய்ப்புகள் ஏற்படுத்துகிறார்.
அய்ந்தாமிடத்திற்க்கு வரும் போது புத்ர பாக்யம் மற்றும் அவர் பார்வை பெறும் 9,11,ராசி ஆகிய இடங்களும் பலம் பெறுகிறது.
ஏழாமிடத்திற்க்கு வரும் போது நல்ல களத்திரம் அமையவும் அவர் பார்வை பெறும் 3,11 ஆகிய இடங்களும் பலம் பெறுகிறது.
ஒன்பதாமிடத்திற்க்கு வரும் போது பாக்கியங்கள் மற்றும் தெய்வ அருள் கிட்டவும்,  அவர் பார்வை பெறும் 3,5 ஆகிய இடங்களும் பலம் பெறுகிறது.
மேலும் குரு பலம் என்றால் கரு பலம் என்றும் பொருள். குரு ராசிக்கு 2,5,7,9,11 ஆகிய இடங்களில் வரும் போது ராசி மற்றும் புத்ர ஸ்தானம், ஐந்துக்கு ஐந்தான பாக்ய ஸ்தானஙகளில் அமர்ந்தும் பார்த்தும் புத்ர பாக்யத்திற்க்கு  பலம் சேர்க்கிரார்.
குரு சந்திரனுக்கு 2,5,7,9,11 ஆகிய இடஙகளில் வரும் போது திருமணம் நடைபெற்ற ஆண்கள் அவர்தம் மனைவி மூலம் பெறும் பாக்யங்கள்
குரு 2ல் நல்ல தாம்பத்ய சுகம், செல்வம்,வாகன வசதி.
     5ல் புகழ், சத்புத்ர யோகம், சமூக அந்தஸ்து.
     7ல் மழலை செல்வம், செல்வாக்கு, வெற்றிகள்
     9ல் பிரபலம், கீர்த்தி, லாபம்
     11ல் தெய்வ அருள், வசதி வாய்ப்புகள், அதிக இன்பம்.
ஒன்பது கிரகஙகளில் குரு அதிக சுபபலம் பொருந்தியவர் என்பதால் அவர் தீமை செய்ய வாய்ப்பு குறைவு. எனவே குரு பலம் வரும் காலத்தில் திருமணம் , சுப நிகழ்ச்சிகள் மற்றும் நற்காரியஙகள் செய்து நன்மை பெறலாம்.
கட்டுரையாக்கம்:  ஜோதிடஸ்ரீ எஸ்.ஆறுமுகம்
வேலூர் ஜோதிட ஆராய்ச்சியாளர்கள் சஙக ஜோதிட நண்பன் தனிச் சுற்று
இதழ் 1ல் (01-10-2010 நாளிட்ட இதழில்) வெளியான கட்டுரை

அஸ்தங்க தோஷம்


சூரியனுக்கு பத்து டிக்ரி உள் வரும் கிரகங்கள் தன் சுய பலத்தை இழந்து விடும். இதில் ராகு, கேது, சந்திரனுக்கு மட்டும் விதிவிலக்கு.

மகர லக்னம்


ஆடி மாதம் பிறந்த மகர லக்ன காரர்களுக்கு அமையும் மனைவி கணவனிடம் அதிக வருமானத்தை எதிர்பார்ப்பாள். மற்றும் கர்வி.

கேது


லக்னத்தில் கேது இருந்தால் பரந்த முகம், பருக்கள் அடையாளம்,
முடி விரைப்பாக இருக்கும்.

ராகு


லக்னத்தில் ராகு இருந்தால் நீண்ட முடி மற்றும் வாசனை
பொருட்களின் மீது ஆர்வம்.

மகம் நட்சத்திர பலன்கள்


பூக்களின் மீது விருப்பம்.
இசையின் மீது மோகம்
சுற்றுலா செல்ல ஆர்வம்
குறைந்த உறக்கம்
நினைத்ததை முடிப்பவர்
கடவுள் பயம்

Wednesday, November 3, 2010

யோனி பொருத்தம்

திருமணத்திற்க்காக பார்க்கப்படும் பத்து பொருத்தங்களில் இது இரண்டாவது முக்கியமானது ஆகும். இப்பொருத்தம் இல்லாவிட்டாலும் பகை யோனி அமையாது இருப்பது நல்லது.

தொழில் மற்றும் சொத்து


சந்திரன், செவ்வாய் சேர்ந்து பத்தாம் இடத்தில் இருக்கும் அமைப்பு உள்ள ஜாதகர் மிகுந்த சொத்து வாங்குவார். ஹோட்டல் தொழில் மற்றும் ரியல் எஸ்டேட் தொழிலில் பிரகாசிப்பார்.

Wednesday, October 27, 2010

பத்தாம் வீட்டு அதிபதி

பத்தாம் வீட்டு அதிபதி ஆறில் மறைந்தால்
ஜாதகர் தனது தந்தையின் இறுதிக்காலத்தின்
போது அருகில் இருக்க மாட்டார்.

ராகு

(எச்சரிக்கை: இக்குறிப்பு திருமணம் ஆனவர்கட்கு அல்ல )
ராகு கிரகமானது சூரியன் அல்லது சுக்ரன்
சேர்க்கை பெற்றால் இந்திரிய பலம் குறைவு.
திருமண பயம் உண்டு
குறிப்புதவி
ஜோதிடர் பாலசுந்தரம் ஆற்காடு

சுக்ரன்

சுக்ரன் நான்காம் வீட்டு அதிபனாகி
ஆட்சி, உச்சம் , திரிகோணம் பெற்று
கெடாமல் (கண்ணை கட்டுதே! ) இருந்தால்
அழகான சொந்த வீடு அமையும்.
கோமாதா குடி இருப்பாள்.

செவ்வாய்

செவ்வாய் இரண்டில் இருந்தால் ஜாதகர்
பேசும் போது கடினமான (Hard words)
வார்த்தைகளை (மொழிபெயர்ப்பு சரிதானே ?)
உபயோகிப்பார். இதனால் குடும்பத்தில் சில
தொல்லைகள் நேரிடும்.

குறிப்புதவி
ஜோதிடஸ்ரீ தேவசேனா சி.எம்.சி

Friday, October 22, 2010

குழந்தை பாக்கியம்


ஐந்தில் ஒரு கிரகம் நீச்சம் பெற்றாலும் ,
அவர் நின்ற சாரநாதன் குருவுடன் சேர்ந்தால்
குழந்தை பாக்கியம் உண்டு
குறிப்புதவி
தேவசேனா, சி.எம்.சி.

Thursday, October 21, 2010

இளைய சகோதரம்

மூன்றில் ராகு இருந்தாலும் அல்லது
மூன்றாவது வீட்டு அதிபதி ராகு
சாரம் பெற்றாலும் இளைய சகோதரன்/
சகோதரி பயன்படமாட்டார். /blush
குறிப்புதவி
ஜோதிடஸ்ரீ SAMU FASHION DE

தூக்கம்

பன்னிரண்டாவது வீட்டு அதிபதி லக்னத்தில்
இருந்தால் அந்த ஜாதகர் எப்படிப்பட்ட
இடத்திலும் தூங்குவார்.  மற்றும் எவ்வளவு
தூரம் வேண்டுமானாலும் நடப்பார்.
குறிப்புதவி
ஜெயராதே, துணைத் தலைவர், VARA

அழகு

லக்னத்தில் சந்திரன் இருந்து சுக்ரனால்
பார்க்கப்பட்டால் ஜாதகர் கவர்ச்சிகரமான
அழகுடையவர்.
குறிப்புதவி
ஜோதிடஸ்ரீ ஆறுமுகம், பொருளாளர், VARA

விளையாட்டில் பிரபலம்

செவ்வாய் மற்றும் ராகு மூன்று - ஆறு - பத்து -
பதினொன்றில் இருந்தால் விளையாட்டில்
பிரபலம் அடைவார்.
குறிப்புதவி
அவிட்டம் வி.ஸ்ரீனிவாசன்  சித்தூர்

வெற்றி வீரர்

மூன்றில் ராகு  இருந்தால் வெற்றி வீரர்
ஆனால் அனுபவ பாக்கியங்கள் குறைவு

இளவயது சாமியார்

பத்தில் கேது இருந்து லக்ன சனி
பார்த்தால் இளவயது சாமியார்

Friday, October 15, 2010

சகலகலாவல்லி மாலை


ஸ்ரீகுமரகுருபர சுவாமிகள்    இயற்றிய
சகலகலாவல்லி மாலை

வெண்டா மரைக்கன்றி நின்பதந் தாங்கவென் வெள்ளையுள்ளத்
தண்டா மரைக்குத் தகாதுகொ லோசக மேழுமளித்
துண்டா னுறங்க வொழித்தான்பித் தாகவுண் டாக்கும்வண்ணம்
கண்டான் சுவைகொள் கரும்பே சகல கலாவல்லியே. 1

நாடும் பொருட்சுவை சொற்சுவை தோய்தர நாற்கவியும்
பாடும் பணியிற் பணித்தருள் வாய்பங்க யாசனத்திற்
கூடும் பசும்பொற் கொடியே கனதனக் குன்றுமைம்பாற்
காடுஞ் சுமக்குங் கரும்பே சகல கலாவல்லியே. 2

அளிக்குஞ் செழுந்தமிழ்த் தெள்ளமு தார்ந்துன் னருட்கடலிற்
குளிக்கும் படிக்கென்று கூடுங்கொ லோவுளங் கொண்டுதெள்ளித்
தெளிக்கும் பனுவற் புலவோர் கவிமழை சிந்தக்கண்டு
களிக்குங் கலாப மயிலே சகல கலாவல்லியே. 3

தூக்கும் பனுவற் துறைதோய்ந்த கல்வியுஞ் சொற்சுவைதோய்
வாக்கும் பெருகப் பணித்தருள் வாய்வட நூற்கடலும்
தேக்குஞ் செழுந்தமிழ்ச் செல்வமுந் தொண்டர்செந் நாவினின்று
காக்குங் கருணைக் கடலே சகல கலாவல்லியே. 4


பஞ்சப் பிதந்தரு செய்யபொற் பாதபங் கேருகமென்
நெஞ்சத் தடத்தல ராததென் னேநெடுந் தாட்கமலத்
தஞ்சத் துவச முயர்த்தோன்செந் நாவு மகமும்வெள்ளைக்
கஞ்சத் தவிசொத் திருந்தாய் சகல கலாவல்லியே. 5

பண்ணும் பரதமுங் கல்வியுந் தீஞ்சொற் பனுவலும்யான்
எண்ணும் பொழுதெளி தெய்தநல் காயெழு தாமறையும்
விண்ணும் புவியும் புனலுங் கனலும்வெங் காலுமன்பாடி
கண்ணுங் கருத்து நிறைந்தாய் சகல கலாவல்லியே. 6

பாட்டும் பொருளும் பொருளாற் பொருந்தும் பயனுமென்பாற்
கூட்டும் படிநின் கடைக்கணல் காயுளங் கொண்டுதொண்டர்
தீட்டுங் கலைத்தமிழ்த் தீம்பா லமுதந் தெளிக்கும்வண்ணம்
காட்டும்வெள் ளோதிமப் பேடே சகல கலாவல்லியே. 7

சொல்விற் பனமு மவதான முங்கவி சொல்லவல்ல
நல்வித்தை யுந்தந் தடிமைகொள் வாய்நளி னாசனஞ்சேர்
செல்விக் கரிதென் றொருகால முஞ்சிதை யாமைநல்கும்
கல்விப் பெருஞ்செல்வப் பேறே சகல கலாவல்லியே. 8

சொற்கும் பொருட்கு முயிராமெய்ஞ் ஞானத்தின் தோற்றமென்ன
நிற்கின்ற நின்னை நினைப்பவர் யார்நிலந் தோய்புழைக்கை
நற்குஞ் சரத்தின் பிடியோ டரசன்ன நாணநடை
கற்கும் பதாம்புயத் தாயே சகல கலாவல்லியே. 9

மண்கண்ட வெண்குடைக் கீழாக மேற்பட்ட மன்னருமென்
பண்கண் டளவிற் பணியச்செய் வாய்படைப் போன்முதலாம்
விண்கண்ட தெய்வம்பல் கோடியுண்டேனும் விளம்பிலுன்போற்
கண்கண்ட தெய்வ முளதோ சகல கலாவல்லியே. 10


திருக்குறள்

இலவச ஜோதிட ஆலோசனை

இலவச ஜோதிட
ஆலோசனைக்கும் தங்களது ஜோதிடம்
தொடர்பான சந்தேகங்கட்கும்
தெளிவுரைகட்கும் தங்களுக்கு மிக
முக்கியம் எனத்
தோன்றும் ஒரு
கேள்வி மட்டும்
கேட்கவும் கேள்வியினை
அனுப்பவேண்டிய மின்னஞ்சல் முகவரி
vedicastrovellore@gmail.com
or
jothidananban@gmail.com

Free Astrology Suggestions

Free Astrology suggestion/solution:

Clear your astrology doubts & clarification

ONLY ONE QUESTION.

contact-

vedicastrovellore@gmail.com

jothidananban@gmail.com