Friday, February 18, 2011

மாசி மகம்




மாசி மகம்


இந்துக்களால் கொண்டாடப்படும் ஒரு சிறப்பான நாள்  மாசி மகம் ஆகும்.
இது மாசி மாத பௌர்ணமியுடன் கூடிவரும் மக நட்சத்திர நாளில் வருகிறது. இன்று மாசி மகம். இன்றைய தினம் கடலாடும் விழா என்றும் கொண்டாடப்படுகிறது.

பிறவிப் பெருங்கடலில் வீழ்ந்து துன்பக்கடலில் மாய்ந்தழுந்தும் ஆன்மாவானது இறைவனது அருட்கடலாகிய இன்பவெள்ளத்தில் அமிழ்ந்து திளைக்கச் செய்யும் நன்நாளே மாசிமகக் கடலாடு தீர்த்தமாகும். தீர்த்தமாட இயலாதவர்கள் விரதமிருந்து கோயிலுக்குச் சென்று இந்நாளைக் கொண்டாடுவர்.

தமிழ் நாட்டில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பகோணத்தில் கும்பேசுவரர் கோயிலில் மாசிமகத் திருவிழா (மகா மகம்) சிறப்பாக நடைபெறும். அன்று யமுனை, சரஸ்வதி, கோதாவரி, நர்மதா, சிந்து, காவேரி போன்ற 12 நதிகள் மக்கள் கழுவிய பாவச்சுமைகளை அகற்றி புனிதம் பெற அங்கு வருவதாகவும். குரு சிம்ம ராசிக்கு வரும் இந்நாளில் எல்லோரும் கடலில் நீராடி நற்பேறு பெறுவர் என்பதும் ஐதீகம்.

இந்த மாசி மகத்தில் கடல் நீராட்டு அவசியம் என்பதையும் அதன் முக்கியத்துவத்தையும் 63 நாயன்மார்களில் ஒருவராகிய எம்பிரான் திருஞானசம்பந்தர் தமது திருமயிலாப்பூர் தேவாரத்தில்,

மடலார்ந்த தெங்கின் மயிலையார் மாசிக்
கடலாட்டுக் கண்டான் கபாலீச்சரம் அமர்ந்தான்
அடல் ஆன் ஏறு ஊறும் அடிகள் அடி பரவி
நடமாடல் காணாதே போதியோ பூம்பாவாய்

- என்று குறிப்பிட்டு பாடியருளி எலும்பாய் இருந்த பூம்பாவாவை என்ற பெண்ணை உயிரோடு எழுப்பினர்ர் என்பது வரலாறு,

சரி,, இவ்வளவு சிறப்புமிக்க மாசி மகத்தை பற்றி தெரிந்தும், நம்மால் எந்த கடலுக்கும் போகமுடியவில்லை என வருந்துபவர்களுக்காக எம்பிரான் திருநாவுக்கரசர் ஒரு அருள் செய்துள்ளார், -  அது தமிழ் நாட்டில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் மாசிமகத் திருவிழா நடைபெறும் கும்பகோணத்தில் கும்பேசுவரர் கோயிலில் அருளிச் செய்த தேவாரம் ஆகும்,

ஏவி இடர்க்கடல் இடைப்பட்டு இளைக்கின்றேனை
     இப்பிறவி அறுத்து ஏற வாங்கி ஆங்கே
கூவிஅமருலகு அனைத்தும் உருவிப் போகக்
     குறியில் அறுகுணதது ஆண்டுகொண்டார் போலும்
தாவி முதல் காவிரி, நல் யமுனை, கங்கை,
     சரசுவதி, பொற்றாமரை, புட்கரணி, தெணநீர்க்
கோவியொடு,  குமரி வரு தீர்த்தம் சூழ்ந்த
     குடந்தைக் கீழ்க்கோட்டத்து எம் கூத்தனாரே,

என்னும் தேவாரமாகும்,

யாராக இருந்தாலும் வீட்டில் குளியலறையில் இறைவனை நினைநது இந்த தேவாரத்தை பாடிவிட்டு குளித்தால் அவர்கள் கடலாடியதற்கு சமமான பலன்களை பெறுவார்கள் என்பது திருநாவுக்கரசரின் ஆணை ,,,

எனவே பாடிவிட்டு குளியுங்கள் 
ஏற்கனவே குளித்திருந்தாலும் 2வது முறையாக
இந்த தேவாரத்தை பாடிவிட்டு குளியுங்கள் -
புண்ணிய கடலாடிய பயனை பெறுங்கள். 

குறிப்புதவி
அன்பன் சிவ. சி. மா. ஜானகிராமன்

Saturday, February 12, 2011

உணவு


திருவாதிரை, சுவாதி,
சதயம் ஆகியன ராகு
நட்சத்திரங்களாகும்,
இந்த நட்சத்திரங்களில்
பிறந்தவர்கள் சாப்பாட்டை
விட சிற்றுண்டி வகை
பிரியர்கள் ஆக இருப்பர்.
குறிப்புதவி
ஜோதிடசிகரம் ரவிகுமார்

மண வாழ்க்கை



ஏழில் சனியுடன்
(சூரியன் இல்லாது)
புதன் அல்லது சுக்ரன்
இணைந்து இருப்பின்
திருப்தியற்ற மண வாழ்க்கை
குறிப்புதவி
கணேஷ், சேலம்

Friday, February 11, 2011

ஆயுள்

                                                        

அதிக ஆயுள்
வழங்குவதில்
எட்டாம் அதிபதியை
விட லக்னாதிபதியே
அதிக அதிகாரம் உடையவர்.


ராகு

ராகுவிற்கு ஐந்தில்
சனி இருந்தால்
ராகு திசை சனி
புக்தி கடுமையான
பாதிப்பை தரும்
குறிப்புதவி
டாக்டர் சி.சங்கரலிங்கம், ஜோதிடர்
ஏ.கே.படவேடு

Thursday, February 10, 2011

இரு தாரம் (Two Affairs)

                                                            
பன்னிரண்டில் குருவுடன் செவ்வாய்
சேர்ந்தால் இரு மனைவிக்கு வாய்ப்பு உண்டு
குறிப்புதவி
டாக்டர் சி.சங்கரலிங்கம், ஜோதிடர்
ஏ.கே.படவேடு
 

சகோதரம்


சனியும் செவ்வாயும்
சேர்ந்தாலும்
பார்த்தாலும்
சகோதர பிரிவு
குறிப்புதவி
                                                       டி.ரகுநாதன், திருச்சி

Wednesday, February 9, 2011

ஏழ்மை


ஏழ்மை

ஒரு ராசிக்கட்டத்தில் நான்கு
கிரகங்கள் சேர்ந்து இருந்து
அதில் ஒன்று பலம்
பெற்றாலும் அதனால்
அந்த ஜாதகருக்கு பலன்
ஏதுமில்லை. ஏழ்மை மட்டுமே
தரும்.

Tuesday, February 8, 2011

சந்திரன்


சந்திரன்

சந்திரன்,  குரு அல்லது
சனியோடு சேர்ந்து இருந்தால்
அந்த ஜாதகர் இளமையிலும்
முதுமை தோற்றம்
உடையவராக இருப்பார்.

குறிப்புதவி
பழனி, கோவை

Monday, February 7, 2011

சனி


சனி

சனி தனுசு ராசியில்
இடம் பெற்ற ஜாதகர்கள்
மத நம்பிக்கை உள்ளவர்களாகவும்
ஞானம் உள்ளவர்களாகவும்
இருப்பர்.

Sunday, February 6, 2011

ராகு



ராகு

லக்னத்திற்க்கு ஆறில்
ராகு இருந்தால்
அந்த ஜாதகருக்கு
விஷ பயம் இல்லை.




                       
 குறிப்புதவி
 டி.ரகுநாதன் திருச்சி

Saturday, February 5, 2011

பாவம்



எட்டாம் வீட்டு அதிபதி
நின்ற பாவம்
பாதிப்படையும்.
குரு பார்த்தால்
பாப நிவர்த்தி.

குறிப்புதவி
ராமன்
சேலம்

Friday, February 4, 2011

சொந்த வீடு



நான்கில் கேது
ஏழில் சனி
இருந்தால்
அந்த ஜாதகர்
சொந்த வீடு
கட்ட சிரமப்படுவார்.

Thursday, February 3, 2011

பாவம்




யோகம் மற்றும்
தோஷங்களை
ராசிப்படி பார்ப்பதைவிட
பாவப்படி
பார்த்தால்
மிகச் சரியாக இருக்கும்

குறிப்புதவி
செந்தில்
கடலூர்

Wednesday, February 2, 2011

குரு வக்ரம்



சூரியன் நின்ற
நட்சத்திரத்திலிருந்து
பத்து முதல்
பத்தொன்பது
நட்சத்திரத்திற்குள்
குரு இருந்தால்
குரு வக்ரம் பெறுவார்.

ஆசைப்படு! பேராசைப்படாதே!



ஆசைக்கும் பேராசைக்கும் என்ன வேறுபாடு? இதற்க்கு ஒரு கதை சொன்னால் தான் புரியும். இதைதாங்க கதை சொல்லி விளங்க வைத்தல் என்கிறோம்.
ஒரு பணக்கார வீட்டு நாய், வீட்டு வாசலில் இரும்புக்கதவின் இடுக்கு வழியே தினசரி வேடிக்கை பார்ப்பதும் அவ்வப்போது தெருவில் செல்லும் தெரு நாய்களோடு பேசுவதும் வழக்கம்.
ஒரு நாள் ஒரு தெரு நாய்,  பணக்கார நாயோடு பேசும்போது
நீ என்ன, உலகம் அறியாது உனது வாழ்க்கையை இந்த வீட்டோடு முடித்துக்கொள்ள போகிறாயா? வெளியில் வா! இந்த உலகைப்பார்! நீ ஒரே வகையான பிஸ்கெட் தான் சாப்பிட்டிருப்பாய்.  ஆனால் நானோ தெருவிற்குத் தெரு, குப்பைக்கு குப்பை விதம் விதமாக சாப்பிட்டுள்ளேன். இந்த உலகம், மனிதர்கள், உணவுகள் என எவ்வளவோ தெரிந்து கொள்ள வேண்டியுள்ளது தெரியுமா? வா வெளியே! என்றது.
அந்த பணக்கார நாய் சிறிது யோசித்துவிட்டு எனக்கும் வெளியே வர ஆசைதான். ஒரு தகவல் சொல்கிறேன் கேள் என்றது.
என்ன?
பத்து நாட்களுக்கு முன் எனது எஜமானுக்கும் அவரது மகளுக்கும்
சரியான சண்டை.
நான் கேட்டதற்கும் நீ சொல்வதற்கும் என்ன சம்பந்தம்?
கேளேன் தனது மகளுக்கு திருமணம் செய்ய வரன் பார்க்க ஜோசியரை எஜமான் அழைத்திருந்தார்.
நான் கேட்டதற்கும் நீ சொல்வதற்கும் என்ன சம்பந்தம்?
கேளேன் ஜோதிடரோ பெண்ணுக்கு ஏழில் ராகு,  திருமணம் தாமதமாகும் என்றார். பெண்ணோ ஏழாம் எண் வீட்டில்
இருக்கும் ரகுதான் வேண்டும் என்றாள்.
நான் கேட்டதற்கும் நீ சொல்வதற்கும் என்ன சம்பந்தம்?
கேளேன். சண்டை முற்றிப் போய் எனது எஜமான்
என்னைக் காண்பித்து “இந்த நாய்க்கு வேண்டுமானாலும்
உன்னை கட்டி வைப்பேனே அன்றி அந்த ரகுவிற்கு
உன்னை கட்டி வைக்கமாட்டேன்என்றார்.
அதற்காகத்தான் காத்திருக்கிறேன்.
இப்போது ஆசைக்கும் பேராசைக்கும் வித்தியாசம்
புரிந்திருக்கும் என நினைக்கிறேன்.

சொன்னவர்
ஆன்மிகச் சொற்பொழிவாளர் திரு சுகி. சிவம் அவர்கள்
நன்றி: 107.8 p.s.g. samuthaya vanoli, Coimbatore

Tuesday, February 1, 2011

புத்திர பாக்கியம்


பத்தாம் அதிபதி
ஆட்சி அல்லது
உச்சம் அல்லது
குரு பார்வை பெற்றால்
கர்மா செய்ய புத்திரர் உண்டு
(நாற்பதுக்குப் பிறகுக்கூட
புத்திர பாக்கியம் ஏற்படலாம்.)

திருக்குறள்

இலவச ஜோதிட ஆலோசனை

இலவச ஜோதிட
ஆலோசனைக்கும் தங்களது ஜோதிடம்
தொடர்பான சந்தேகங்கட்கும்
தெளிவுரைகட்கும் தங்களுக்கு மிக
முக்கியம் எனத்
தோன்றும் ஒரு
கேள்வி மட்டும்
கேட்கவும் கேள்வியினை
அனுப்பவேண்டிய மின்னஞ்சல் முகவரி
vedicastrovellore@gmail.com
or
jothidananban@gmail.com

Free Astrology Suggestions

Free Astrology suggestion/solution:

Clear your astrology doubts & clarification

ONLY ONE QUESTION.

contact-

vedicastrovellore@gmail.com

jothidananban@gmail.com