ஆசைக்கும் பேராசைக்கும் என்ன வேறுபாடு? இதற்க்கு ஒரு கதை சொன்னால் தான் புரியும். இதைதாங்க கதை சொல்லி விளங்க வைத்தல் என்கிறோம்.
ஒரு பணக்கார வீட்டு நாய், வீட்டு வாசலில் இரும்புக்கதவின் இடுக்கு வழியே தினசரி வேடிக்கை பார்ப்பதும் அவ்வப்போது தெருவில் செல்லும் தெரு நாய்களோடு பேசுவதும் வழக்கம்.
ஒரு நாள் ஒரு தெரு நாய், பணக்கார நாயோடு பேசும்போது
”நீ என்ன, உலகம் அறியாது உனது வாழ்க்கையை இந்த வீட்டோடு முடித்துக்கொள்ள போகிறாயா? வெளியில் வா! இந்த உலகைப்பார்! நீ ஒரே வகையான பிஸ்கெட் தான் சாப்பிட்டிருப்பாய். ஆனால் நானோ தெருவிற்குத் தெரு, குப்பைக்கு குப்பை விதம் விதமாக சாப்பிட்டுள்ளேன். இந்த உலகம், மனிதர்கள், உணவுகள் என எவ்வளவோ தெரிந்து கொள்ள வேண்டியுள்ளது தெரியுமா? வா வெளியே!” என்றது.
அந்த பணக்கார நாய் சிறிது யோசித்துவிட்டு ”எனக்கும் வெளியே வர ஆசைதான். ஒரு தகவல் சொல்கிறேன் கேள்” என்றது.
என்ன?
பத்து நாட்களுக்கு முன் எனது எஜமானுக்கும் அவரது மகளுக்கும்
சரியான சண்டை.
நான் கேட்டதற்கும் நீ சொல்வதற்கும் என்ன சம்பந்தம்?
கேளேன் தனது மகளுக்கு திருமணம் செய்ய வரன் பார்க்க ஜோசியரை எஜமான் அழைத்திருந்தார்.
நான் கேட்டதற்கும் நீ சொல்வதற்கும் என்ன சம்பந்தம்?
கேளேன் ஜோதிடரோ பெண்ணுக்கு ஏழில் ராகு, திருமணம் தாமதமாகும் என்றார். பெண்ணோ ஏழாம் எண் வீட்டில்
இருக்கும் ரகுதான் வேண்டும் என்றாள்.
நான் கேட்டதற்கும் நீ சொல்வதற்கும் என்ன சம்பந்தம்?
கேளேன். சண்டை முற்றிப் போய் எனது எஜமான்
என்னைக் காண்பித்து “இந்த நாய்க்கு வேண்டுமானாலும்
உன்னை கட்டி வைப்பேனே அன்றி அந்த ரகுவிற்கு
உன்னை கட்டி வைக்கமாட்டேன்” என்றார்.
அதற்காகத்தான் காத்திருக்கிறேன்.
இப்போது ஆசைக்கும் பேராசைக்கும் வித்தியாசம்
புரிந்திருக்கும் என நினைக்கிறேன்.
சொன்னவர்
ஆன்மிகச் சொற்பொழிவாளர் திரு சுகி. சிவம் அவர்கள்
நன்றி: 107.8 p.s.g. samuthaya vanoli, Coimbatore
No comments:
Post a Comment