Monday, January 31, 2011

யாருக்கு ஜோதிடம் வரும்?




சூரியன் மற்றும் புதன் பத்து டிகிரிக்குள்
அஸ்தங்கமாகாது , இவர்களில் ஒருவர்
ஆட்சியோ அல்லது உச்சமோ பெற்று
இருந்தால் அந்த ஜாதகருக்கு ஜோதிடம்
கற்கும் அசாத்திய திறமை இருக்கும்.


Sunday, January 30, 2011

சுக்ரன்




சுக்ரன் ராசி/நவாம்சத்தில்
மூன்று
ஆறு
ஒன்பது
பன்னிரண்டு
ஆகிய இடங்களில்
ஆட்சி அல்லது உச்சம்
பெற்றாலும்
நன்மை இல்லை

குறிப்புதவி
தெக்களூர் சிவராஜ்
திருப்பூர்

Saturday, January 29, 2011

ஆறாம் வீட்டு அதிபதி




ஆறாம் வீட்டு அதிபதி
உச்சமானால் அந்த ஜாதகர்
தனக்காக வாழ்வதைவிட
பிறருக்காக வாழ்வார்.

குறிப்புதவி
ஜோதிடர் காந்தி

ஆறாம் வீட்டு அதிபதி

சச்சின் டெண்டுல்கர்



சச்சின் டெண்டுல்கரின் ஒரு நாள்
வருமானம் ஒன்றரை கோடி.
சரி, இவரது ஜாதகம் என்ன சொல்கிறது?
நீங்களே கணித்து பாருங்களேன்.
மென்பொருள்தான் இருக்கவே இருக்கிறதே!
பிறந்த நாள் 24-04-1973
நேரம்       காலை 07.30
அட்சாம்சம் 18 N 56, 72 E 51
பிறந்த நட்சத்திரம் பூராடம்



Friday, January 28, 2011

கோவை நகரில் வித்தியாசமான மனிதாபிமான நடவடிக்கை

குடிபோதையில் வருடக்கணக்காக கொடுமைப்படுத்தியவரை கிரிக்கெட் மட்டையால் அடித்துக்கொன்ற மகனையும், மனைவியையும் கைது செய்யாமல் கோவை போலீசார் விடுவித்தனர். கோவை நகர போலீஸ் கமிஷனர் சைலேந்திரபாபுவின் உத்தரவின் பேரில் இந்த புதிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கோவையைச் சேர்ந்த மணி என்பவர் கடந்த முப்பது ஆண்டுகளாக எந்த வேலைக்கும் செல்லாமல் தினமும் மனைவி சம்பாதித்த காசை பிடுங்கி குடித்து விட்டு வந்து மனைவியை அடித்து கொடுமைப்படுத்தி வந்துள்ளார். மணியின் கொடுமை நாளுக்கு நாள் அதிகரித்து வந்துள்ளது. மேலும் அந்த பகுதி மக்களுடனும் மணி குடிபோதையில் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார்.
கடந்த பதினோராம் தேதி இரவு வழக்கம் போல் குடித்து விட்டு வந்து தகராறு செய்து, தாயாரின் சொற்ப வ்ருமானத்தில் சிரமப்பட்டு கல்லூரியில்  படித்துக்கொண்டிருக்கும் தனது மகனையும், படித்தது போதும் வேலைக்குச் சென்று சம்பாதி என்று திட்டி இருவரையும் சரமாரியாக தாக்க தொடங்கியுள்ளார்.  இதில் இருந்து தப்பிக்க தனது கணவரை பிடித்து மனைவி தள்ள, மகன் தனது தந்தையை தாக்க, இதில் மணி சம்பவ இடத்திலேயே இறந்து போனார்.
வழக்கமாக இது போன்ற சம்பவங்களில் தாயும் மகனும் கைது செய்து சிறையில் அடைக்கப்படுவர். இந்த வழக்கை மனிதாபிமான முறையில் அணுகிய காவல் துறை கல்லூரி மாணவரது கல்வி, எதிர்காலம்  மற்றும் தாயின் நிலையையும் கருத்தில் கொண்டு கொலைக்கான சட்டப்பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்படாமல் தற்காப்புக்கான சம்பவமாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.  இந்த சம்பவத்தில் நடைபெற்ற விபரங்கள் மற்றும் அப்பகுதி மககளின் சாட்சிய அடிப்படையில் கோர்ட்டில் அறிக்கை மட்டும் தாக்கல் செய்யப்பட உள்ளதாக போலீஸ் கமிஷ்னர் கூறியுள்ளார்.
கோவை நகரில் முதன்முறையாக வித்தியாசமான மனிதாபிமான  
நடவடிக்கையை காவல்துறை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

நன்றி: தினமலர், தினத்தந்தி

ஈகை குணம்




சூரியனுக்கு மூன்றில்
சந்திரன் இருப்பின்
அந்த ஜாதகருக்கு
ஈகை குணம்
அதிகம் இருக்கும்.

Thursday, January 27, 2011

திருமண வாழ்க்கை




ஏழாம் வீட்டு அதிபதி/சுக்ரன்
அம்சத்தில் ஆட்சி/உச்சம் பெற்றால்
வெற்றிகரமான திருமணவாழ்க்கை
அமையும்.

குறிப்புதவி
இலக்கியா

Wednesday, January 26, 2011

ஜாதகம் கணிக்க மென்பொருள்


ஜாதகம் கணிக்க என்னதான் விழுந்து விழுந்து படித்தாலும்
அதை சுலபமாக கணிணியில் மென்பொருள் வழியாக
கணக்கீடு செய்து பார்ப்பதில் உள்ள ஆவலே தனிதான்.

ஜாதகம் கணிக்க பல மென்பொருட்கள் வலையில் உள்ளன. இதில் பதிவுலக முன்னணி பதிவரான திரு வேலன் அவர்கள்
தனது பதிவில் அளித்துள்ள மென்பொருளினை
பதிவிறக்கி பார்த்து பயன்பெறவும். மென்பொருள் குறித்தான முழு விபரமும் அவரே தனது பதிவில் அளித்துள்ளதால் மேல் விபரம் தேவையில்லை எனக் கருதுகிறேன்.

நன்றி: திரு வேலன் அவர்கள்

ஜோதிடக்குறிப்புகள்


ஜோதிடக்குறிப்புகளை
நீங்களும் அனுப்பலாம்.
ஜோதிடக்குறிப்புகள்
எங்களது மின்னஞ்சல்
முகவரி  velloreastro@gmail.com
க்கோ அல்லது அலைபேசியில்
குறுந்தகவலாக 9443540743 என்ற
எண்ணுக்கோ அனுப்பலாம்.
குறுந்தகவல்கள் தங்களது
பெயருடன் வெளியிடப்படும்.

Tuesday, January 25, 2011

துன்பம்



கோசாரச் சனி
மக நட்சத்திரத்தில்
வரும் போது
அதிக துன்பம் தருவார்.

குறிப்புதவி
ஸ்ரீகாந்த்,
ஆல் இந்தியா ரேடியோ,

திருச்சி.

Monday, January 24, 2011

மறதி




லக்னத்திற்க்கு பன்னிரண்டில்
சந்திரனோ அல்லது லக்னாதிபதியோ
இருந்தால் அந்த ஜாதகர்க்கு
மறதி உண்டு.
(மிக முக்கியம்: கடன் கொடுப்பவர்கள்
இந்த அமைப்பு உள்ளவர்கட்கு கடன்
கொடுக்க வேண்டாம்)

குறிப்புதவி
ஜொதிடர் இராமசாமி
சென்னை

ஆத்ம ஞானம்




ராகு/கேது
கடகம் அல்லது மகர
ராசியில் இருப்பின்
இருப்பின்
ஆத்ம ஞானத்தை
அளிப்பார்.

உதாரணம்
வாரியார் சுவாமிகள்
பிறந்த நாள் 25-08-1906
பிறந்த கிழமை  சனிக்கிழமை
நேரம் அதிகாலை 4.37
பிறந்த இடம் காங்கேயநல்லூர் (வேலூர்)

ராமலிங்க வள்ளலார்
பிறந்த நாள் 05-10-1823
பிறந்த கிழமை ஞாயிற்றுக்கிழமை
நேரம் மாலை 05.30
பிறந்த இடம் மருதூர் (வடலூர்)

Monday, January 17, 2011

குரு



கோச்சார குரு, ஜென்ம சூரியன் இருந்த
ராசியில் நின்றாலும் அல்லது அதனை
பார்த்தாலும் உத்யோக உயர்வு ஏற்படும்

Sunday, January 16, 2011

உணவு


ஆறில் சனி கெட்டால் ஜீரண கோளாறு
இருக்கும். இதனால் அந்த ஜாதகர்
அதிகம் சாப்பிடுவார்.

குறிப்புதவி
ஜோதிடர் சாமு

Saturday, January 15, 2011

வாழ்த்துக்கள்

           இனிய பொங்கல் 
                மற்றும்
           தமிழ் புத்தாண்டு
             வாழ்த்துக்கள்

Friday, January 14, 2011

பொங்கல் வாழ்த்து !

பொங்கல் திருநாளாம் இந்நாளில்
பொய்ம்மை மறையும் நன்நாளில்
பொங்கல் வாழ்த்துதனை நானும்
பொறாமையின்றி கூறிட விழைகிறேன் !

நாட்டில் உள்ளோர் அனைவரும்
நாணயமான வாழ்வுதனை நடத்தட்டும்
நல்லோரும் வல்லோரும் இணைந்து
நானில புத்துலகை அமைக்கட்டும் !

உலகில் வாழும் தமிழரெல்லாம்
உயர்ந்த வாழ்வு நடத்தட்டும்
உரிமைக்குரலை நாளும் ஒலித்திடவே
உண்மையாக யாவரும் உழைக்கட்டும் !

தைமகள் வருகையை எல்லோரும்
தவறாமல் எதிர்க்கொண்டு நோக்கட்டும்
தமிழரின் தன்மானம் உலகில்
தனித்தன்மை யோடு திகழட்டும் !

தைத்திங்கள் முதல்நாள் பிறக்கட்டும்
தரணிவாழ் தமிழர்கள் சிறக்கட்டும்
பொங்கல் விழாவதுவும் மலரட்டும்
பொதுமைக் கருத்துக்கள் உலாவரட்டும் !

எல்லார்க்கும் எல்லாமும் கிடைக்கட்டும்
என்றென்றும் உலகமக்கள் யாவரும்
எல்லா வளமும் பெற்றிட்டே
ஏற்புடனே திகழ்ந்து மகிழட்டும் !

அன்புடன்  அனுப்பி வைத்தவர்     சிவ. சி. மா. ஜானகிராமன்
இதனையே அனைவருக்கும் எங்களது   பொங்கல் வாழ்த்தாக சமர்ப்பிக்கிறோம்
பொங்கும் மங்களம் எங்கும் தங்குக

தந்தை


ஒரு ஜாதகத்தில் சூரியன் சுபராகி, ஆட்சி/உச்சம்
மற்றும் குரு பார்வையுடன் இருந்தால், அந்த
ஜாதகரது தந்தையார் நல்ல அந்தஸ்துடன்
இருப்பார்.

குறிப்புதவி
ஜோதிடர் காந்தி, வேலூர் – 9.


Thursday, January 13, 2011

திருமணப் பொருத்தம்



திருமணத்திற்காக பத்து பொருத்தங்கள்
பார்ப்பது நடைமுறையில் உள்ளது.
இதனுடன் கூடுதலாக பார்க்க வேண்டியவை
பட்சி, நாடி, விருட்சம், வர்ணம், விருத்தம்,
யோகினி, லிங்கா மற்றும் பஞ்சபூதம் ஆகியன.


Wednesday, January 12, 2011

செல்போனில் ராசி பலன்

செல்போனில் ராசி பலன் மற்றும் இதர 
விவரங்கள் பார்ப்பது எப்படி என்று தெரியுமா?
பொதுவாக நாம் தின ராசி பலன் பார்க்க நாளிதழ்
பார்ப்போம். அந்த நாளிதழ் செல்போனில் வரவைக்க 
நாம் செய்ய வேண்டியது- நெட் சேவைக்குள் சென்று
www.newshunt.com  என்று டைப் செய்து, newshunt 
software download செய்து பின்னர் போனில் news hunt
icon மீது க்ளிக் செய்தால் உடனே ஆங்கிலம் மற்றும் 
தமிழ் நாளிதழ் திறக்கும். நமக்கு எது தேவையோ
அதை க்ளிக் செய்து ராசி பலன்,அரசியல்,தலைப்பு
செய்தி முதலானவற்றை வாசித்து மகிழலாம்.
நீங்களும் முயற்சி செய்து பாருங்க.
  
குறிப்புதவி
வி.ரவிராஜன்

பன்னிரண்டாம் வீட்டு அதிபதி


பன்னிரண்டாம் வீட்டு அதிபதி இரண்டில்
அமர்ந்தால் அந்த ஜாதகருக்கு
வரவு எட்டணா செலவு பத்தணா


குறிப்புதவி
ஜோதிடஸ்ரீ ஏ.பி.வேணுகோபால்.

Monday, January 10, 2011

திருமண வாழ்க்கை



கணவன், மனைவி சுகபோக வாழ்க்கைக்கு
ஒரு உன்னத அமைப்பு  ஏழிற்கு உடையவன்
உச்சம் பெற்று நாலில் சுபருடன் கூடுவது ஆகும்.
குறிப்புதவி
தேவசேனா


சுக்ரன்


சுக்ரன் ஒன்பதில் இருக்கும் ஜாதகரது
விருப்ப தெய்வமாக பெண் தெய்வமே
இருக்கும்.

குறிப்புதவி
ஜோதிட சிகரம் லட்சுமிநாராயணன்


Sunday, January 9, 2011

ஜோதிடப்பழமொழிகள்-30



பத்தில் பாம்பு இருந்தால் பணம்
பறந்து வரும்

ராகு/கேது பத்தில் இருந்தால்
ஜாதகர் நன்கு சம்பாதிப்பார்.




ஜோதிடப்பழமொழிகள்-29


கணம் ஒன்றாயில் குணம் பதானே
(இது மலையாள பழமொழியாகும். தமிழில்
தட்டச்சியதில் பிழை இருப்பின் தெரிந்தவர்
தெரிவிப்பின் உடன் மாற்றம் செய்யப்படும்.)

மற்ற எந்த பொருத்தம் குறைவாக இருந்தாலும்
கணப்பொருத்தம் இருந்தால் திருமணம்
செய்யலாம்.

குறிப்புதவி
ரவிராஜா

நான்காம் வீடு

நான்காம் வீடு நீர் ராசியாக இருந்தாலோ அல்லது
நான்காம் வீட்டினை நீர் கிரகம் பார்த்தாலோ
அந்த தசா புக்தியில் ஜாதகர் வெளிநாடு
செல்ல வாய்ப்பு உண்டு.

குறிப்புதவி
இலக்கியா


Saturday, January 8, 2011

குரு



குரு பார்வையுடன் லக்னத்தில் சுபர்
இருப்பின் ஜாதகர் சந்தோஷமாக
இருப்பார்.


ஜோதிடப்பழமொழிகள்-28



நாளும் கோளும் நலிந்தோர்க்கு இல்லை
மிகுந்த ஏழ்மை நிலையில் உள்ளோர்க்கு

நாளும் கோளும் பார்த்தல் பயன் தராது.
கடும் உழைப்பு மட்டுமே பயன் தரும்


Thursday, January 6, 2011

ஜோதிடப்பழமொழிகள்-26



சனி பிடித்தவனுக்கு சந்தையிலும்
கந்தை கிடைக்காது.


Wednesday, January 5, 2011

ஜோதிடப்பழமொழிகள்-25



வைத்தியன் கையை பிடிப்பான்
ஜோதிடன் காலை பிடிப்பான்

ஜோதிடர்கள் கிரகங்கள் நின்ற பாத
சாரத்தினை வைத்து பலன் சொல்வார்கள்


Tuesday, January 4, 2011

ஜோதிடப்பழமொழிகள்-24


கன்னியில் செவ்வாய் கடலும் வற்றும்

கன்னியில் செவ்வாய் இருப்பவர்கள்
எவ்வளவு பண்ம் வைத்து இருந்தாலும்
செலவு செய்து விடுவார்கள்


Monday, January 3, 2011

ஜோதிடப்பழமொழிகள்-27


ராசி இருக்கு தாசில் பண்ண
அம்சம் இருக்கு கழுதை மேய்க்க

ராசி கட்டம் சிறப்பாக இருந்தாலும்
அம்சமும் சிறப்பாக அமைந்தால்தான்
யோகம் உண்டு.


ஜோதிடப்பழமொழிகள்-23

குரு பார்க்க கோடி நன்மை

ஒருவரது ஜாதகத்தில் குரு இருந்த
இடத்தை விட குரு பார்த்த இடங்கள்
மிகச் சிறந்த பலன்களை தரும்

குறிப்புதவி
அ.பா.வேணுகோபால்
முதன்மை கணக்காயர்


திருக்குறள்

இலவச ஜோதிட ஆலோசனை

இலவச ஜோதிட
ஆலோசனைக்கும் தங்களது ஜோதிடம்
தொடர்பான சந்தேகங்கட்கும்
தெளிவுரைகட்கும் தங்களுக்கு மிக
முக்கியம் எனத்
தோன்றும் ஒரு
கேள்வி மட்டும்
கேட்கவும் கேள்வியினை
அனுப்பவேண்டிய மின்னஞ்சல் முகவரி
vedicastrovellore@gmail.com
or
jothidananban@gmail.com

Free Astrology Suggestions

Free Astrology suggestion/solution:

Clear your astrology doubts & clarification

ONLY ONE QUESTION.

contact-

vedicastrovellore@gmail.com

jothidananban@gmail.com